Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 1

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு செய்யுள் : திருக்குறள் – பண்புடைமை இயல் இரண்டு செய்யுள் நாகரிகம் / பண்பாடு கற்றல் நோக்கங்கள் ❖ திருக்குறளின் மேன்மையை அறிந்துகொள்ளுதல் ❖ தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்துகொள்ளுதல் ❖ தமிழர்கள் வீரக்கலைகளுக்கு அளித்த முதன்மையைப் புரிந்துகொள்ளுதல் ❖ தமிழர் கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்துத் தெரிந்துகொள்ளுதல் ❖ உரையாடல்களிலும் தொடர்களிலும் இணைப்புச்சொற்களைப் பயன்படுத்துதல் திருக்குறள் பண்புடைமை 1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு பொருள் : அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்கு உரிய நல்ல வழியாகும். சொல்பொருள் : ஆன்ற – உயர்ந்த 2. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு பொருள் : நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். சொல்பொருள் : நயன் – நேர்மை; நன்றி – நன்மை 3. பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் பொருள் : நற்பண்பு உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இல்லையெனில், அது மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும். சொல்பொருள் : புக்கு – புகுந்து; மாய்வது – அழிவது 4. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். பொருள் : அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவரே ஆவர். சொல்பொருள் :  அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி; போல்வர் – போன்றவர் 5. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று பொருள் : பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றதாகும். சொல்பொருள் : பெருஞ்செல்வம் – மிகுந்த செல்வம்; நன்பால் – நல்ல பால் நூல்குறிப்பு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, திருக்குறள். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளை உடையது. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. உலகிலுள்ள அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த அறநெறிக் கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுகிறது. இந்நூலை இயற்றியவர், திருவள்ளுவர். மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1. ‘ஆன்ற‘ – இச்சொல்லின் பொருள் அ) உயர்ந்த ஆ) பொலிந்த இ) அணிந்த […]

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 4

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் இலக்கணம் : மூவிடப்பெயர்கள் கற்கண்டு மூவிடப்பெயர்கள் மான்விழி : அடடே! கலையரசியா? ஆளே அடையாளம் தெரியவில்லையே? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்? கலையரசி : நானும்கூட உன்னைப் பார்த்து நெடுநாளாகிவிட்டது. எங்கள் குடும்பத்துடன் மும்பையில் அல்லவா இருந்தோம், சென்ற வாரம்தான் என் தந்தைக்குப் பணிமாற்றம் நம்ம ஊரிலேயே கிடைத்தது. மேற்கண்ட செய்தியைப் படித்தீர்களா? நீங்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டீர்கள் என்று பார்க்கலாமா? ● நீங்கள் படித்த செய்தி, என்ன வடிவத்தில் உள்ளது? உரையாடல் வடிவம் ● நீங்கள் படித்த பகுதியில் பேசுபவர் யார்? கேட்பவர் யார்? பேசுபவர் மான்விழி, கேட்பவர் கலையரசி ● இருவரும் என்ன பேசுகிறார்கள்? இருவரும் நெடுநாள் கழித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது குறித்துப் பேசுகின்றனர். சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆகவே, நீங்கள் படித்த உரையாடலில் பேசுவோர், கேட்போர், பேசப்படும் பொருள் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. இங்கு பேசுபவர் யார்? மான்விழி. அதனால், பேசுவோரைக் குறிக்கும் இடம் தன்மை. அடுத்ததாக, கேட்பவர் யார்? கலையரசி. ஆதலால், கேட்போரைக் குறிக்கும் இடம், முன்னிலை. இருவரும் யாரோ ஒருவரைப்பற்றி அல்லது ஏதோ ஒரு செய்தியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆதலால், பேசப்படுபவர் அல்லது பேசப்படும் செய்தியைக் குறிக்கும் இடம், படர்க்கை. ❖ தன்னைக் குறிப்பது தன்மை. ❖ முன்னால் இருப்பவரைக் குறிப்பது, முன்னிலை. ❖ இவ்விருவரையும் தவிர மற்றவற்றை/ மற்றவர்களைக் குறிப்பது, படர்க்கை. ❖ ஒரு பெயர்ச்சொல்லை வேறொரு பெயர்ச்சொல்லால் குறிப்பது, மாற்றுப் பெயர்ச்சொல். ❖ இந்த மாற்றுப் பெயர்ச்சொல்தான் இடம் நோக்கித் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடப்பெயர்களாக அமைகிறது. தன்மை – நான், நாம், யான், யாம், நாங்கள் முன்னிலை – நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் படர்க்கை – அவன், அவள், அவர், அது, அவை தற்போதைய வழக்கில், அவர் என்பது, ஒருவரைக் குறிக்கிறது; அவர்கள் என்பது, பலரைக் குறிக்கிறது. எ.கா. அவர் பேசினார்/ அவர்கள் பேசினார்கள். ஆனால், அது வந்தது, அவை வந்தன என்று இருப்பதைப்போல், அதுகள் வந்தது, அவைகள் வந்தன என்பன வழக்கில் இல்லை. அவை, வழூஉச்சொற்களாகக் (பிழையானவையாகக்) கூறப்படுகின்றன. மூவிடப்பெயர்கள் – ஒருமையும் பன்மையும் மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 1. ————- எங்குச் சென்றீர்கள்? அ) நீ ஆ) நாங்கள் இ) நீங்கள் ஈ) அவர்கள் [விடை : இ) நீங்கள்] 2. செடியில் பூக்கள் பூத்திருந்தன ———- அழகாக இருந்தன. அ) அது ஆ) அவை இ) அவள் ஈ) அவர் [விடை : ஆ) அவை] 3. இந்த வேலையை ——– செய்தேன். அ) அவள் ஆ) அவர் இ) நான்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 3

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் துணைப்பாடம் : நானும் பறக்கப் போகிறேன் இயல் ஒன்று துணைப்பாடம் நானும் பறக்கப் போகிறேன் என்னம்மா செய்கிறாய்? அப்பா, நான் பறக்கப் போகிறேன். இப்படியெல்லாம் பறக்கமுடியாது, அமுதா பறவைகள் பறக்கின்றன. நான் பறக்க முடியாதா அப்பா? ஓ! அதுவா, சொல்கிறேன். வா! தோட்டத்திற்குப் போகலாம். பறவைகள் உடலமைப்பு எப்படி உள்ளது என்று பார். படகின் துடுப்பு போல இருக்கிறது அப்பா. ம்..சரிதான் இதைத் தூக்கிப்பார். பார்க்கத்தான் பெரிதாக உள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால், எடை குறைவாக இருக்கிறதே! ஆமாம்… பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.. ஓ! அப்படியென்றால், பறவையைவிட அதிக எடையுடன் நான் இருப்பதால்தான் என்னால் பறக்க முடியவில்லையா? அப்படியில்லை, அங்கே பார், காற்றைக் கிழித்து மேலே பறக்க, பறவைகளுக்கு இறக்கைகள் உதவுகின்றன. ஆமாம்..அப்பா. பறவைகளின் பின்புற வால் துடுப்புபோல் செயல்பட்டுத் திசைமாறிப் பறக்க உதவுகிறது. ஓ இத்தனை அமைப்புகள் இருப்பதால்தான் பறவைகளால் பறக்க முடிகிறதா?.  “ஆம் மகளே.. மனிதன் பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான். அப்படி விமானத்தைக் கண்டுபிடித்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியுமே! ரைட் சகோதரர்கள் அல்லவா! சரியாகச் சொன்னாய்.’ பாராட்டுகள். அவர்களும் உன்னைப்போல் பறக்க ஆசைப்பட்டவர்கள்தாம் அதற்காக அவர்கள் என்ன முயற்சி செய்தார்கள்? சிறுவயதிலே இருவரும் பறவைகளைப் பார்ப்பது, பல வகைகளில் பட்டங்கள் செய்து பறக்கவிடுவது என ஆர்வமாக இருந்தனர். அருமை. இயற்கையைப் பார்த்து வியப்பது, விளையாடுவது இவற்றிலிருந்துகூட நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியுமா ? ஆம். ரைட் சகோதர்கள் தாங்கள் பறப்பதற்காகப் பலமுறை முயற்சி செய்தனர் அனைத்திலும் தோல்வியே. ஆனாலும், தோல்வியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள். ஓட்டப் பந்தயத்தில் தோற்றால்கூட சிலர் அழுகிறார்களே, அப்பா. ஆம். நாம் எதிலும் தொடர்ந்து முயற்சி செய்தால், கட்டாயம் ஒருநாள் வெற்றி பெறலாம். அப்போ… ரைட் சகோதர்கள் இதில் எப்படி வெற்றி பெற்றார்கள்? அவர்கள் செய்த முயற்சிகளில் உள்ள குறைகளைச் சரிசெய்து கொண்டே வந்தார்கள். ஒரு நாள் பறப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்து விட்டார்கள். அது எப்போது நடந்தது?. 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று 12 நொடிகள் ரைட் சகோதரர்களில் ஒருவர். தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் உயர்ந்த பகுதியிலிருந்து சிறிது தூரம் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நானும்கூட அப்படி ஒருநாள் பறந்துகாட்டுவேன், மேலும் சாதனைகள் படைப்பேன் அப்பா. நல்லது, முயற்சி செய் மதிப்பீடு வினாக்களுக்கு விடையளிக்க. 1. தன்னால் பறக்க முடியாததற்கு அமுதா கூறிய காரணம் என்ன? விடை பறவையைவிட அதிக எடையுடன் இருப்பதால்தான் தன்னால் பறக்க முடியவில்லை என்று அமுதா கூறினாள். 2. பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது? விடை பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 2

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் உரைநடை : அறிவின் திறவுகோல் இயல் ஒன்று உரைநடை அறிவின் திறவுகோல் முதன்முதலில் அறிவு என்னும் கருவி செயல்படத் தொடங்கிய நாள், மனிதனுக்கு அச்சம் மிகுந்ததாகவே இருந்திருக்கும். தன் அறிவைக் கொண்டு, அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். காலையில் ஒளிவீசிக் கொண்டிருந்த கதிரவன், திடீரென மாலையில் மறைந்ததும் அவனது அறிவு விழித்துக் கொண்டது. அந்தக் கதிரவன் எங்கே போனான்? இப்படியே இருளாகத்தான் இருக்குமா? என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க மறுநாள் மீண்டும் கதிரவன் தோன்றினான். அப்போதே மனிதனின் அறிவு வேலை செய்யத் தொடங்கியது. இந்தக் கதிரவன் நேற்றுத் தோன்றிய இடத்திலேயே ஏன் இன்றும் தோன்றுகிறான்? இதுபோன்று அடுக்கடுக்காக அவன் உள்ளத்தில் சிந்தனை தோன்றியது. ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியபோதுதான் அறிவியல் வளரத் தொடங்கியது. அவ்வகையில் அறிவியலை வளர்த்த அறிஞர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் தேவை. இப்பாடப்பகுதியில் அறிவால் வளர்ந்த அறிவியல் சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். ஆப்பிளைக் கண்டார்; ஆற்றலைத் தந்தார் தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரத்தினடியில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அப்போது, மரத்திலிருந்த ஒரு பறவை சிறகடித்துப் பறந்து செல்ல, திடீரென ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? “ஆகா, நமக்கு ஓர் ஆப்பிள் கிடைத்ததே” என்று மகிழ்ச்சியோடு உண்ணத் தொடங்கியிருப்போம் அல்லவா? ஆனால், அந்தச் சிறுவன், அப்படி நினைக்கவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே மேலே வானத்தைநோக்கிப் போகாமல் கீழிறங்கி வந்து விழுகிறது? என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டான். இதில் ஏதோ ஓர் இயற்கைச் சக்தி இருக்கவேண்டும் என எண்ணினான். இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளில் முடிவு செய்தான். அன்று தன் பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். அன்று சிந்திக்கத் தொடங்கிய அந்தச் சிறுவன்தான், புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்துப் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற சர் ஐசக் நியூட்டன். அவர், பூமிக்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவியலறிஞர் ஆவார். வேடிக்கை பார்த்தார்; வியக்க வைத்தார் பூங்கா ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தார் மருத்துவர் ஒருவர். சிறுவனொருவன், ‘ஸீஸா’ என்ற ஒருவகை மரப்பலகையின் மீது ஒரு முனையில் குண்டூசியால் கீறிக்கொண்டிருந்தான். பலகையின் மறுமுனையில் தன் காதைப் பொருத்தி, எழும் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தான் மற்றொரு சிறுவன். பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் மெதுவாகக் கீறும்போது எழுந்த ஒலி, மறுமுனையில் மிகத் தெளிவாகக் கேட்பதைக் கண்டு அந்தச் சிறுவன் வியப்படைந்தான். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அந்த மருத்துவர், சிறுவர்களின் செய்கையைக் கண்டார். அவர் உள்ளத்தில் மின்னல்போல் ஓர் ஒளிக்கீற்று தோன்றியது. தாம் விடை தெரியாமல் தவித்த ஒரு வினாவுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. அவர், அந்தச் சிறுவர்களை நோக்கிச் சென்றார். மரம் போன்ற திடப்பொருள்கள் ஒலியைப் பெருக்கும் தன்மையுடையவை. அதனால்தான், ஒரு முனையில் மெதுவாகக் கீறினாலும் மறுமுனையில் தெளிவாகக் கேட்கிறது என அவர்களிடம் விளக்கினார். அந்த விளக்கம் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும்தாம். ஏனெனில், நோயாளியின் இதயத் துடிப்பை எவ்வாறு துல்லியமாகக் கேட்கமுடியும் என்றுதானே அவர் கவலைப்பட்டார். இப்போது, அவருக்கே விடை காண முடிந்ததல்லவா? உடனே ஓட்டமும்நடையுமாக மருத்துவமனையை அடைந்தார். தாள்களை ஓர் உருளை வடிவமாகச் சுருட்டிக் கொண்டு, நோயாளியை நெருங்கினார். காகித உருளையின் ஒரு முனையை நோயாளியின் மார்பில் வைத்து, மறுமுனையில் தம் காதை வைத்துக் கேட்டார். என்ன வியப்பு! நோயாளியின் இதயத்துடிப்பு இவருக்குத் துல்லியமாகக் கேட்டது. அந்த மணித்துளியில் மருத்துவ உலகம் அதுவரை கண்டிராத மாபெரும் ஒரு முயற்சிக்கு வித்திட்டது. ஆம். ஸ்டெதஸ்கோப் எனப்படும் இதயத்துடிப்பைக் கண்டறியும் கருவி அப்போதுதான் உருவானது. அதைக் கண்டுபிடித்தவர், வேறு யாருமல்லர், அந்தப் பூங்காவில் சிறுவர்களின் விளையாட்டிலிருந்து ஓர் உண்மையைக் கண்டுபிடித்தாரே அந்த மருத்துவர்தாம். அவர் பெயர், இரேனே லென்னக். ஆவியைக் கண்டார்; நீராவி இயந்திரம் தந்தார் அந்தச் சிறுவனுக்கு வயது பன்னிரண்டு. சமையலறைக்குள் நுழைந்த சிறுவன், தேநீர் தயாரிப்பதற்காகக் கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நீர் நன்றாகக் கொதித்தவுடன் அந்தக் கெட்டிலின் மூக்கு வழியாகக் ‘குப் குப்’ என்று ஆவி வெளிவருவதைப் பார்த்தான். இந்த ஆவி வெளிவராதபடி கெட்டிலின் மூக்கை அடைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணினான். உடனே, அந்தப் பாத்திரத்தின் மூக்குப்பகுதியை மூடினான். இப்போது ஆவி வரவில்லை. சிறிதுநேரம் சென்றது. கெட்டிலின் மூடி மெல்ல அசையத் தொடங்கியது. அதனால், சிறிது இடைவெளி ஏற்பட்டது. இப்போது, நீராவி கொப்புளித்துக்கொண்டு வெளியேறியது. அந்தச் சிறுவன் பார்த்துக்கொண்டே நின்றான். மேலும் சிறிதுநேரம் சென்றபின், கெட்டிலின் மூடி மேலெழும்பத் தொடங்கியது. அப்புறம் … அப்புறம் என்ன? மூடியைத் தள்ளிவிட்டு நீராவி வேகமாக வெளிவரத் தொடங்கியது. அந்தச் சிறுவனுக்கு வியப்பு மேலிட்டது. இந்த நீராவியும் புகையும்தான் அந்தச் சிறுவனை நீராவி என்ஜினையும் புகைவண்டியையும் கண்டுபிடிக்கத் தூண்டியது. அந்தச் சிறுவன்தான் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் வாட். இவர்தாம் நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தார். மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1 அறிவியலறிஞர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) அறிவியல் + அறிஞர் ஆ) அறிவு + அறிஞர் இ) அறிவியல் + லறிஞர் ஈ) அறவியல் + அறிஞர் [விடை : அ) அறிவியல் + அறிஞர்] 2. பேருண்மை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) பேர் + உண்மை ஆ) பெரிய + உண்மை இ) பேரு + உண்மை ஈ) பெருமை + உண்மை [விடை : ஈ) பெருமை + உண்மை] 3. பத்து + இரண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது அ) பன்னிரெண்டு ஆ) பன்னெண்டு இ) பன்னிரண்டு ஈ) பன்னண்டு [விடை : இ) பன்னிரண்டு] 4. வேகமாக – இச்சொல்லுக்குரிய பொருள். அ) மெதுவாக ஆ) விரைவாக இ) கவனமாக ஈ) மெலிதாக [விடை : ஆ) விரைவாக]

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே? இயல் ஒன்று பாடல் அறிவியல் / தொழில்நுட்பம் கற்றல் நோக்கங்கள் ❖ அறிவியல் விழிப்புணர்வுப் பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல் ❖ சுற்றுப்புறத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் பின்புலம் உள்ளதை அறிந்துகொள்ளுதல் ❖ அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தவர்களையும் தெரிந்துகொள்ளல் ❖ காரணகாரியங்களை அறிவியல் மனப்பான்மையுடன் அணுகுதல் ❖ மூவிடப்பெயர்களை அறிந்துகொண்டு, உரிய இடங்களில் பயன்படுத்துதல் எதனாலே, எதனாலே? எதனாலே, எதனாலே? பலவண்ண வானவில் எதனாலே? விண்மீன் ஒளிர்வது எதனாலே? ரோஜாப்பூ சிவப்பது எதனாலே? இலைகள் உதிர்வது எதனாலே? மின்மினி மின்னுவது எதனாலே? பறவைகள் பறப்பது எதனாலே? மின்னல் மின்னுவது எதனாலே? மேகம் கறுப்பது எதனாலே? கடலில் அலைகள் எதனாலே? அனைத்தின் காரணம் கண்டறிந்தால் அறிஞனாகலாம் அதனாலே பாடல் பொருள் ஏன், எதற்கு, எப்படி என்னும் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைக் காரணகாரியங்களுடன் விளக்க முற்படுகிறது. ● வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது, ● விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன. ● ரோஜாப்பூவில் ‘ஆந்தோசைனின்’ என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது. ● கோடைக்காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன. ● மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுகின்றன. காரணம், லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது. ● பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன. ● மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது. ● மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது. ● பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன. மதிப்பீடு படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! அ. பொருத்துக 1. விண்மீன் – உதிரும் 2. ரோஜாப்பூ – பறக்கும் 3. மேகம் – ஒளிரும் 4. இலை – சிவக்கும் 5. பறவை – கறுத்திருக்கும் விடை : 1. விண்மீன் – ஒளிரும்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை கற்கண்டு சொற்றொடர் அமைப்பு முறை எழுவாய் ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும்) எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள் செயப்படுபொருள் ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள் எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள் பயனிலை ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம். எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள் ஆடினாள் – என்பது

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை துணைப்பாடம் : தப்பிப் பிழைத்த மான் இயல் மூன்று துணைப்பாடம் தப்பிப் பிழைத்த மான் கா… கா…. காகம் கரைந்து தன் நண்பனான மானைத் தேடியபடி அழைத்தது இதோ வந்துவிட்டேன் என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடி வந்தது மான். காகம் : நண்பா! நலமாக இருக்கிறாயா? மான் : ஏதோ இருக்கிறேன் நண்பா . காகம் : குரலில் உற்சாகமில்லையே…. ஏன் சோர் வாகப் பேசுகிறாய்? மான் : எனக்கு மிகவும் பசியாக

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை உரைநடை : படம் இங்கே! பழமொழி எங்கே? இயல் மூன்று உரைநடை படம் இங்கே! பழமொழி எங்கே? பழையனூர் மாந்தோப்பில் கிளி ஒன்று இருந்தது. அதன் பெயர் செல்லம்மா. அந்த ஊரில் அதை அவ்வாறுதான் பெயர் சொல்லி அழைப்பார்கள். மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை மரப் பொந்திலிருந்து எடுத்துக் காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச் சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை பாடல் : கடல் இயல் மூன்று இயற்கை கற்றல் நோக்கங்கள் ❖ இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுவர். ❖ பழமொழிகள் உணர்த்தும் ஆழமான பொருளை அறிந்து பயன்படுத்துவர் ❖ புதிர்கள், விடுகதைகள் உருவாக்கும் திறன் பெறுவர் ❖ எழுவாய், செயப்படு பொருள், பயனிலை அறிந்துகொள்வர் பாடல் கடல் எல்லை அறியாய் பெருங்கடலே – நீதான் இரவும் உறங்காயோ? கடலே அல்லும் பகலும் அலைகடலே – உனக்கு அலுப்பும் இலையோ கருங்கடலே பொங்கு திரைகளோ? கடலே –

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 3

தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி துணைப்பாடம் : வறுமையிலும் நேர்மை இயல் இரண்டு துணைப்பாடம் வறுமையிலும் நேர்மை ஓர் ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த பணக்காரர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று, தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர். இளகிய உள்ளம் கொண்ட அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டா. ஆளுக்கொரு

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 3 Read More »