Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Air We Breathe

அறிவியல் : பருவம் 3 அலகு 3 : நாம் சுவாசிக்கும் காற்று அலகு 3 நாம் சுவாசிக்கும் காற்று அறிமுகம் கற்றலின் நோக்கங்கள் ❖ இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன ❖ காற்று ஒரு கலவை என்பதை அறிந்துகொள்ளல். ❖ காற்றின் உட்கூறுகளையும் அவற்றின் அளவையும் புரிந்துகொள்ளல். ❖ காற்று மாசுபாடு மற்றும் அதன் விளைவுகளை உணர்தல். அறிமுகம் நமது பூமி நிலம், நீதி காற்று ஆகியவறைக் கொண்கொண்டது அனைத்து உயிரினங்களும் வாழ இம்மூன்றும் மிகவும் முக்கியமானவை. நம்மைச் சுற்றி காற்று உள்ளது. இது மழை பெய்வதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கு இது அவசியமானது. செய்து மகிழ்வோம் காலியான நெகிழி தண்ணீர்ப்பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம்மூடியால் பாட்டிலை இறுக்கமாக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்? விடை:காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும். அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவம் 1. காற்றில் இருக்கும் ஆக்சிஜன் சுவாசத்திற்குத் தேவைப்படுகிறது. 2. நம்மைச் சுற்றி காற்று இருப்பதால் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது. 3. விதைகளை பரப்புவதற்குக் காற்று உதவுகிறது. 4. காற்று வீசுவதால் பருவமழை பொழிகிறது. 5. வளிமண்டல வெப்பநிலையைக் காற்று கட்டுப்படுத்துகிறது. முயல்வோம் காற்று/வாயு உள்ள பொருள்களை (✔) குறியிடுக காற்று ஒரு கலவை   நாம் சுவாசிக்கும் காற்று பல வாயுக்களின் கலவையாக உள்ளது. நீராவி மற்றும் புகை ஆகிய வை கலந்துள்ளன. ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயுக்களும் காற்றில் உள்ளன. காற்று அதில் இருக்கும் அனைத்து வாயுக்களின் பண்புகளையும் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக காற்றிலுள்ள ஆக்சிஜன் எரிதலுக்குத் துணைபுரிகிறது. விறகைப் பயன்படுத்தி சமைக்கும் போது, நாம் ஊதுகுழாய் மூலம் காற்றை ஊதுகிறோம். அப்போது காற்றில் உள்ள ஆக்சிஜன் விறகை நன்றாக எரியச் செய்கிறது. உங்களுக்குத் தெரியுமா கோடைக் காலங்களில் மண் பானையிலிருந்து எவ்வாறு குளிர்ந்த நீர் கிடைக்கிறது? மண் பானையில் ஆயிரக்கணக்கான சிறிய துளைகள் உள்ளன. இத்துளைகளின் மூலம் நிரானது நீராவியாக வெளியேறுவதால் பானையில் உள்ள நீர் குளிர்ச்சியாக உள்ளது. முயல்வோம் எவற்றிலிருந்து நீராவி வெளிவரும்? (✔) குறியிடுக. உங்களுக்குத் தெரியுமா நாதஸ்வரமும் புல்லாங்குழலும். காற்றைக் கொண்டு இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும். காற்றின் உட்கூறுகளும் அவற்றின் அளவும் காற்றில் உள்ள வாயுக்களின் இயைபு நிலையானதன்று . இது இடத்திற்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடும். காற்று ஒரு தனிப்பொருள் அன்று. அது பல்வேறு கூறுகளாலானது. நிரப்புவோம் காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக. நைட்ரஜன் காற்றில் சுமார் 78% நைட்ரஜன் உள்ளது. பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவினை நீண்ட நாள் பாதுகாக்க இது பயன்படுகிறது. திரவ நைட்ரஜன் செல்களை சேமிக்க பயன்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் அவசியமானது. சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜன் உள்ளது. தற்போது வாகன சக்கரங்களில் நைட்ரஜன் வாயுவை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நைட்ரஜனின் சில சேர்மங்கள் வெடிபொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உங்களுக்குத் தெரியுமா 1772 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து வேதியியலாளர் டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜனைக் கண்டறிந்தார்.

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Air We Breathe Read More »

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Life of Animals

அறிவியல் : பருவம் 3 அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை அலகு 2 விலங்குகளின் வாழ்க்கை கற்றலின் நோக்கங்கள் இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன ❖ விலங்குகளின் குழு நடத்தை பற்றி புரிந்துகொள்ளல். ❖ விலங்குகளின் தகவமைப்பினை அறிந்துகொள்ளல். ❖ பூச்சிகளின் உடலமைப்பை அறிந்துகொள்ளல். ❖ சில விலங்குகளின் சிறப்புப் புலன் உணர்வுகளைப் பட்டியலிடுதல். ❖ இரவில் செயல்படும் விலங்குகளைப் பற்றி தெரிந்துகொள்ளல். ❖ இளம் உயிரிகளைப் பாதுகாப்பது பற்றி உணர்தல். அறிமுகம் உணவைப் பார்க்கும்போது நாயின் நாக்கில் எச்சில் வருவது ஏன் என சிந்தித்ததுண்டா? குயில் ஏன் கோடைகாலத்தில் மட்டுமே கூவுகிறது? தாய்ப்பறவை கூட்டிற்குத் திரும்பும்போது இளம் பறவைகள் வாயைத் திறப்பது ஏன்? ஒவ்வொரு விலங்கிற்கும் சில தனித்துவமான நடத்தைகள் உள்ளன. விலங்குகளின் நடத்தை என்பது அவற்றின் செயல்பாடுகளையும் பிற உயிரினங்களுடனான தொடர்புகளையும் உள்ளடக்கியதாகும். எ.கா: கண் சிமிட்டுதல், சாப்பிடுதல், நடத்தல் மற்றும் பறத்தல். விலங்குகளின் குழு நடத்தை விலங்குகள் தமது இனத்தைச் சார்ந்த மற்ற விலங்குகளுடன் சேர்ந்து வாழ்வதால் பல நன்மைகளைப் பெறுகின்றன. இது குழு நடத்தை என்று அழைக்கப்படுகிறது. புலி, கரடி போன்ற விலங்குகள் தனித்து வாழ்கின்றன. சில விலங்குகள் சிறிய குழுக்களாக வாழ்கின்றன. எ.கா: சிங்கங்கள். சில விலங்குகள் பெரிய மந்தையாக வாழ்கின்றன.எ.கா: புள்ளிமான் கூட்டம். உங்களுக்குத் தெரியுமா யானை, அணில், எலி மற்றும் வௌவால் போன்ற சில விலங்குகள் தூங்கும்போது கனவு காண்கின்றன. பூனை, நாய் மற்றும் குரங்குகள் நீண்ட நேரம் கனவு காண்கின்றன. உணவைத் தேடவும், வாழிடங்களைத் தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன. இதையே நாம் குழு நடத்தை அல்லது சமூக நடத்தை என்று அழைக்கிறோம். இயற்கை சூழலில் விலங்குகள் வாழ உதவுவதே குழு நடத்தையின் முக்கிய நோக்கமாகும். எ.கா: ஒரு நீர்நிலையில் உள்ள அனைத்து மீன்களும் ஒன்றிணைந்து முன்னால் செல்கின்ற தங்கள் தலைவரைப் பின் தொடர்கின்றன ஒரு குழுவில் இணைந்திருப்பதால், சிறிய மீன்களும் பெரியதாகத் தோன்றுகின்றன. தேனீக்களின் குழு நடத்தை பூச்சிகள் குழுவாக வாழும்போது, அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கின்றன. எ.கா: ஒரு தேன் கூட்டில் ஒரு ராணித்தேனியும், ட்ரோன்கள் எனப்படும் ஆண் தேனீக்களும் நூற்றுக்கணக்கான பெண் வேலைக்காரத் தேனீக்களும் காணப்படும். பறவைகளின் கூடு கட்டும் நடத்தை பறவைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவை வெவ்வேறு உணவுகளை உண்டு, வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன. மேலும் வெவ்வேறு வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றன. சில பறவைகள் நிரந்தரமாகக் குழுக்களாக வாழ்கின்றன. சில பறவைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்றன. எல்லாப் பறவை இனங்களும் கூடுகளை கட்டுவதில்லை. அவற்றுள் சில தங்கள் முட்டைகளைத் தரையில் அல்லது பாறைகளின் இடைவெளியில் இடுகின்றன. பெரும்பாலான பறவைகள் பொறியாளர்களைப் போல கவனமாக தாமும், தம் இளம் பறவைகளும் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளைக் கட்டுகின்றன. பறவைகள் இலை மற்றும் மரக்குச்சிகளைக் கொண்டு கூடுகளைக் கட்டுகின்றன. சில பறவைகள் முட்களால் கூடுகளைக் கட்டி, பின் அதன்மீது மென்மையான பொருள்களை கொண்டு கூட்டினை மென்மையாக்குகின்றன. உங்களுக்குத் தெரியுமா சமூக நெசவாளர் (Social weavers) என்ற பறவைகள் தனியாகக் கூடுகளைக் கட்டுவதில்லை. அவ்வினத்தின் ஆண்பறவைகள் ஒன்றாக இணைந்து 400 பறவைகள் தங்கக் கூடிய ஒரு பொதுவான கூட்டினைக் கட்டுகின்றன. பச்சை ஹெரான் (Green Heron) என்ற பறவையால் நீந்த முடியாது என்றாலும், அது தண்ணீரிலிருக்கும் மீனை எப்படி பிடிக்கிறது? அது வண்ணமயமான இலைகள் மற்றும் பழங்களைத் தண்ணீரில் போடும்போது, அவற்றை நோக்கி மீன்கள் வரும். அப்போது, தன் அலகால் அவற்றைப் பிடித்து உண்கிறது. யானைகளின் குழு நடத்தை ஒரு குழுவாக இருக்கும் யானைகளை, யானைக் கூட்டம் என்று அழைப்பர் ஒவ்வொரு குழுவிலும், ஒரு பெண் யானை தலைவராக உள்ளது. இது உணவு, நீர் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக அக்குழுவை வழிநடத்திச் செல்லும் இக்குழுவில் உள்ள அனைத்து யானைகளும் பெண் யானையின் கட்டளைக்குக் கீழ்ப்படியும். ஒரு கூட்டத்தில் உள்ள மூத்த யானைகள் குட்டிகளுக்குப் பழக்கவழக்கத்தையும் வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக்கொடுக்கின்றன. யானைகளைப் போல மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள் போன்றவையும் கூட்டமாக வாழும். முயல்வோம் விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக. குழு நடத்தையால் விலங்குகள் பெறும் நன்மைகள் குழு நடத்தை : எடுத்துக்காட்டு 1. உணவைப் பெறுதல் – சிங்கம் வேட்டையாடி உணவைப் பகிர்தல் 2. இளம் உயிரிகளின் பாதுகாப்பு – பெண் யானை தன் குட்டிகளைப் பாதுகாத்தல் 3. வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பு – காட்டெருமைகள் பலத்த ஒலியை எழுப்பி, தம் கூட்டத்தை எச்சரித்தல் 4. வேலைப் பகிர்வு – வேலைக்காரத் தேனீக்கள் மலரிலிருந்து தேனை சேகரிச்சல், தேன் கூட்டை உருவாக்குகல் 5. ஆற்றல் சேமிப்பு – காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் “V” வடிவத்தில் பறத்தல் உங்களுக்குத் தெரியுமா கடல் நீர்நாய்கள் தூங்கும்போது அவை கைகளைப்  பிடித்துக்கொள்கின்றன. அதனால் அவை ஒன்றைவிட்டு ஒன்று விலகிப் போவதில்லை. விலங்குகளில் தகவமைப்பு  தகவமைப்பு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு விலங்கு தன் வாழ்விடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது தகவமைப்பு ஆகும். அவ்வாறு அதன் நடத்தையை மாற்றத் தவறினால் அது உயிர் வாழ்வது கடினம். அனைத்து விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட பருவநிலைக்கு ஏற்பவும், குறிப்பிட்ட சூழலில் வாழவும் சில சிறப்புப் பண்புகளைப் வற்றுள்ளன. எ.கா: ஒட்டகச்சிவிங்கிகள் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மிக நீண்ட கழுத்தைக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Life of Animals Read More »

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Green Environment

அறிவியல் : பருவம் 3 அலகு 1 : பசுமை சுற்றுச்சூழல் அலகு 1 பசுமை சுற்றுச்சூழல் கற்றலின் நோக்கங்கள் இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன ❖ கழிவு மேலாண்மை முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல். ❖ கழிவு மேலாண்மையின் 3R களின் பங்கைப் புரிந்துகொள்ளல். ❖ நல்ல பழக்கங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நமது சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்துகொள்ளல். ❖ சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உணர்தல். அறிமுகம் இயற்கை நமக்குப் பல பயனுள்ள பொருள்களை வழங்குகிறது. தொழிற்சாலைகள் இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, நாம் கடைகளில் வாங்கும் பொருள்களை உருவாக்குகின்றன. இவற்றை நாம் பயன்படுத்திய பின், அவை கழிவுகளாக மாறுகின்றன. பயன்படுத்திய ஒரு பொருள் மீண்டும் தேவைப்படாதபோது, அதைக் ‘கழிவு’ என்கிறோம். அது உடைந்து, தேய்ந்து அல்லது மீண்டும் பயன்படுத்த முடியாததினால், நமக்கு உபயோகப்படுவதில்லை. கழிவு என்பது திட திரவ அல்லது வாயு நிலையில் இருக்கலாம். மேலும், அவை வீடுகள், பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள், கடைகள் போன்ற பல இடங்களிலிருந்து பெறப்படலாம். பொதுவாகக் கழிவுகள் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. கழிவு மேலாண்மை சிருஸ்திக்கா : நமது சுற்றுச்சூழலில் அதிக அளவில் குப்பைகளைக் காண்கிறேன். நாம் இவற்றைக் குறைக்க ஏதேனும் வழி உள்ளதா? ஆசிரியை : ஆம். குப்பைகளான இந்தக் கழிவுகளைக் குறைக்க பல வழிகள் உள்ளன. கழிவுகளைக் குறைத்தல் கழிவு மேலாண்மையில் மிக முக்கியமான படிநிலை ஆகும். : விமல் : கழிவு மேலாண்மை என்றால் என்ன? ஆசிரியை : சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாகக் கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை’ ஆகும். இது மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளைப் பிரித்தெடுக்கும் செயல்களை உள்ளடக்கியது. ஜனனி : கழிவு மேலாண்மையின் படிநிலைகளைக் கூறுங்களேன். ஆசிரியை : அதைப்பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள். கழிவு மேலாண்மையில் நான்கு படிநிலைகள் உள்ளன. அவை, 1. கழிவுகளைப் பிரித்தல் 2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் 3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல் 4. கழிவுகளை அகற்றுதல் 1. கழிவுகளைப் பிரித்தல்: கழிவுகளை வெவ்வேறு கழிவுத் தொட்டிகளில் பிரித்து வைப்பதே கழிவுகளைப் பிரித்தல் எனப்படும். ஒவ்வொரு தொட்டியிலும் வெவ்வேறு கழிவுகள் இருக்க வேண்டும். மட்கும் கழிவிற்கு பச்சை, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவிற்கு நீலம், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவிற்கு சிவப்பு என மூன்று வெவ்வேறு நிற தொட்டிகளில் பிரிப்பது சிறந்தது. மட்காத கழிவினை, ‘மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு’ என்றும் ‘மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு’ என்றும் பிரிக்கலாம். 2. கழிவுகளைச் சேசுரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்: வீடுகளிலும் பள்ளிகளிலும், கழிவுகளைப் பிரித்தவுடன், ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியினால் அக்கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுகளை எடுக்கும் செயலை ‘கழிவு சேகரிப்பு’ என்கிறோம். கழிவுகளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ‘கழிவுகளை எடுத்துச் செல்லுதல்’ எனப்படும். 3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்: மட்கும் கழிவு உரமாக மாற்றப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. உரம் தாவரங்களுக்கு உணவாகிறது. மேலும் இது மண்ணை வளமாக்குகிறது. புதிய பொருள்களைத் தயாரிப்பதற்காக மட்காத கழிவு (மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு) மறுசுழற்சி தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 4. கழிவுகளை அகற்றுதல்: இது மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும். இம்முறையில் கழிவுகள் திறந்த வெளியிலோ, நிலத்தின் அடிப்பகுதியிலோ நிரப்புவதற்காக அனுப்பப்படுகிறது. செயல்பாடு கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக. (கழிவுகளை அகற்றுதல், கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்) 1. கழிவுகளைப் பிரித்தல் 2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், 3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல் 4. கழிவுகளை அகற்றுதல் ராகுல் : நாம் வீட்டில் கழிவுகளை எவ்வாறு கையாளுவது? ஆசிரியை : வீட்டிலுள்ள கழிவுகளை முறையாகக் கையாளுவதற்கு மூன்று முறைகள் உள்ளன. இதை சுருக்கமாக 3R என்பார்கள். கோமதி : ‘3R’ கள் என்றால் என்ன? ஆசிரியை : குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) ஆகிய செயல்களை 3R கள் என்கிறோம். முதலில் கழிவுப் பொருள்களைக் குறைத்து, பின் அவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகே மறுசுழற்சி செய்ய வேண்டும். இச்செயல்முறைகளை எளிதில் மனதில் வைத்துக்கொள்ள பின்வருமாறு குறிக்கலாம். 3Rகள் குறைத்தல் என்பது பொருள்களைக் குறைவாக உருவாக்குவது மற்றும் குறைவாகப் பயன்படுத்துவது எனப் பொருள்படும். அதாவது குறைவான கழிவினை உருவாக்கும் பொருள்களைத் தயாரிப்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவதாகும். இதுவே கழிவுகளைக் குறைப்பதற்கு செய்யப்படும் முதன்மையான செயலாகும். குறைவான கழிவுகளை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. நீங்கள் ஒரு மை பேனா வாங்கிப் பயன்படுத்தும்போது, அதில் மை தீர்ந்தால் மீண்டும் நிரப்பி அதே பேனாவைப் பயன்படுத்தலாம். 2. உங்கள் பெற்றோருடன் கடைவீதிக்குச் செல்லும்போது, நீங்கள் ஒரு துணிப் பையை எடுத்துச் செல்வதால் அங்கு நீங்கள் நெகிழிப் பைகளை வாங்குவதைத் தவிர்க்க முடியும்.

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Green Environment Read More »

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Plants

அறிவியல் : பருவம் 2 அலகு 3 : தாவரங்கள் அலகு 3 தாவரங்கள் கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ இலைகளின் பாகங்களையும் அவற்றின் பணிகளையும் பட்டியலிடுதல். ❖ ஒளிச்சேர்க்கையின் செயல்முறையை விளக்குதல் ❖ தாவரங்கள் முதல்நிலை உற்பத்தியாளர்கள் என்பதனை விவரித்தல். ❖ மலரின் பாகங்களை விவரித்தல். ❖ பச்சையம் உள்ள மற்றும் பச்சையம் அற்ற தாவரங்களைப் பற்றி அறிதல். ❖ அழகுத் தாவரங்களையும் அவற்றின் பங்கினையும் பட்டியலிடுதல் ❖ தாவரங்களின் உண்ணக்கூடிய பல்வேறு பகுதிகளை அடையாளம் காணுதல். அறிமுகம் அனைத்து உயிரினங்களும் உணவை உட்கொள்கின்றன. உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் அன்றாடச் செயல்பாட்டிற்கும் உணவு அவசியமாகிறது. விலங்குகள் தமக்குத் தேவையான உணவைத் தேடி உண்பதைக் காண்கிறோம். ஆனால் தாவரங்கள் தங்கள் உணவை எவ்வாறு பெறுகின்றன என்பதனை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? இலைகளில் இருக்கும் பச்சையம் எனும் நிறமியின் உதவியுடன் தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்கின்றன. மனிதர்களும் விலங்குகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணவுக்காகத் தாவரங்களைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. இத்தகைய தாவரங்களைப் பற்றி இப்பாடத்தில் மேலும் அறிந்து கொள்வோம். I. இலையின் பாகங்கள் இலைகள் வேறுபட்ட வடிவம் மற்றும் அளவுகளையும், பல்வேறு பாகங்களையும் கொண்டுள்ளன. எனினும், பெரும்பாலான இலைகள் பொதுவான சில அடிப்படையான பாகங்களைப் பெற்றுள்ளன. இலைத்தாள் : இது இலையின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா). இலை நுனி : இது இலையின் முனைப் பகுதியாகும். மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு காணப்படும். நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாது உப்புகளைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்களாக செயல்படுகின்றன. இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது. இலைத்துளைகள் (Stomata) இலைத்துளைகள் என்பவை இலையில் காணப்படும் சிறிய துளைகளாகும். இவை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் காணப்படும் அத்துளைகளின் வழியாக காற்று உட்புறமும் வெளிப்புறமும் செல்கின்றது. இலைத்துளைகள் தாவரங்களின் சுவாசித்தலுக்கும் வாயுப்பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன. . 1. இலை ஓர் உணவுத் தொழிற்சாலை (Leaf as a Food Factory) தாவரங்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. ஆனால் அவை உணவிற்காக மனிதர்களையோ, விலங்குகளையோ சார்ந்திருப்பதில்லை. பெரும்பான்மையான தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை தாங்களே தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. இதனையே ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்கிறோம். ஒளிச்சேர்க்கை = ஒளி (சூரிய ஒளி) + சேர்க்கை (தயாரித்தல்) ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும். தாவரங்கள் இச்செயல்முறையினை அவற்றுள் எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன என்பதைப் பார்ப்போம். சிந்தித்து விடையளி ● எப்பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு இலையினுள் செல்கிறது? விடை: இலைத்துளைகள். ● இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது? விடை: இலை நரம்புகள் நீர் : நீரானது வேர்களால் உறிஞ்சப்பட்டு, தண்டுகளின்  வழியாக இலைகளுக்கு அனுப்பப்படுகிறது. கார்பன் டைஆக்சைடு: காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு இலைகளில் உள்ள சிறிய இலைத்துளைகளின் வழியே இலையினுள் செல்கிறது. சூரிய ஒளி: இலைகளில் உள்ள பச்சையம் என்ற நிறமி சூரிய ஒளியினை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இந்த நிறமி பச்சையம் என்றழைக்கப்படுகிறது. இந்த நிறமி இருப்பதாலேயே பெரும்பாலான இலைகள் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்கள் உணவை உற்பத்தி செய்து ஆக்சிஜனை (உயிர்வளி) காற்றில் வெளியேற்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தேவையான உணவைத் தாங்களே தயாரிப்பதனால் அவை முதன்மை உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. முதன்மை உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லாமல் பிற உயிரினங்களால் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்ய இயலாது. மேலும் அவ்வுயிரினங்களால் வாழவும் இயலாது. சிந்தித்து விடையளி தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் உயிர் வாழ முடியாது? விடையளிப்போம் அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்தி, கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடுவது. (ன்சி ஆஜக்)

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Plants Read More »

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Water

அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர் அலகு 2 நீர் கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ நீரின் மூன்று நிலைகளைப் புரிந்துகொள்ளல். ❖ நீர் சுழற்சியை விவரித்தல். ❖ நீர் சுழற்சியின் அவசியத்தை விளக்குதல். ❖ மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் பயன்களைத் தொகுத்தளித்தல் அறிமுகம் நாம் வாழும் பூமியில் மிகுதியான மற்றும் விலைமதிப்புள்ள வளமாக நீர் இருக்கின்றது. பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நிலத்தடியிலும் நீர் காணப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழவும், அவற்றின் பிற

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Water Read More »

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Food

அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவு அலகு 1 உணவு கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருள்களை வேறுபடுத்துதல். ❖ பல்வேறு சமைக்கும் முறைகளை ஒப்பிட்டுப் பார்த்தல். ❖ பல்வேறு வகையான சமையல் பாத்திரங்களைப் பற்றி விளக்குதல். ❖ சுகாதாரமான உணவு மற்றும் உடல்நலக் குறைவின்போது உண்ணவேண்டிய உணவுகளை அடையாளம் காணுதல். ❖ உணவை வீணாக்கக்கூடாது என்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல். அறிமுகம் உணவானது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. நமது அனைத்து

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Food Read More »

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Science in Everyday Life

அறிவியல் : பருவம் 1 அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் அலகு 4 அன்றாட வாழ்வில் அறிவியல் கற்றல் நோக்கங்கள் இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்கள் ❖ பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை அறிதல். ❖ சமைப்பதின் நன்மைகளை அறிந்து கொள்ளல். ❖ ரொட்டி, பிஸ்கட் மற்றும் கேக் தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளல். ❖ அன்றாட வாழ்வில் பயன்படும் மின்னணு சாதனங்கள் பற்றி அறிதல் நினைவு கூர்வோம் ஆசிரியர் : நீங்கள் காலையில் எழுந்தவுடன் பருகம் பானம் என்ன? மாணவர்கள்: தேநீர், காபி, பால் ஆசிரியர் : நல்லது. இந்த பானங்களில் என்னென்ன பொருள்கள் கலந்துள்ளன? ராம் : பால், சர்க்கரை, தேயிலைத்தூள், காப்பித்தூள். ஆசிரியர் : மிகவும் நன்று நாம் காலையில் பால் குடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? ராம் : தெரியும் ஐயா. பால் நம் உடல்நலத்திற்கு நல்லது. ஆசிரியர் : சரி இந்தப் பகுதியில் பாலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். I. பால் சில விலங்குகள் தனது குட்டிகள் குடிப்பதற்காக பாலைச் சுரக்கின்றன. மனிதர்கள் பாலை பல விலங்குகளிடமிருந்து பெறுகின்றனர். இருப்பினும் பசும்பாலே பொதுவாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1. பாலின் ஆதாரங்கள் விலங்குகளைத் தவிர பாலானது பிற ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுகிறது. எ.கா: சோயா பால், கொட்டை மற்றும் விதைகளிலிருந்து பெறப்படும் பால். பாலில் உள்ள கொழுப்பின் அளவைக் கொண்டு, இதனை முழுமையான பால் (கொழுப்பு எடுக்காத பால்), குறைந்த கொழுப்புள்ள பால், கொழுப்புச்சத்து இல்லாத பால் என வகைப்படுத்தலாம். உங்களுக்குத் தெரியுமா செம்மறியாடு, வெள்ளாடு, ஒட்டகம், கழுதை, குதிரை, காட்டெருமை, நீர் எருமை, கலைமான் மற்றும் கடைமான் போன்ற பிற பாலூட்டிகளில் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாலைப் பெறுகின்றனர். 2. பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் பாலில் தண்ணீர், சர்க்கரை, புரதம், கொழுப்பு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. சர்க்கரை : பாலின் இனிப்புச் சுவைக்குக் காரணம், அதில் உள்ள லாக்டோஸ் சர்க்கரை ஆகும். புரதம் : தசைகள் உருவாக்கத்தில் உதவுகிறது. கொழுப்பு : பாலில் உள்ள கொழுப்புச்சத்து வெண்ணெய் எனப்படும். மற்ற கொழுப்புகளை விட வெண்ணெய் மிகவும் சுவையாக இருக்கும். வைட்டமின்கள் : பாலில் உள்ள வைட்டமின் – D எலும்புகளைப் பராமரிக்க உதவுகிறது. தாது உப்புகள் : பாலில் உள்ள கால்சியம் வலிமையான எலும்புகளையும் பற்களையும் பெற உதவுகிறது. அன்றாட வாழ்வில் பாலின் பயன்பாடுகள் ☆ குழந்தைகளுக்கான முதன்மையான உணவு. ☆ பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உகந்த பானம் . ☆ தயிர், வெண்ணெய், மோர், நெய் ஆகியவற்றைக் கொடுக்கிறது ☆ பாலைடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள் தயாரிக்க பயன்படுகிறது. ☆ ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்டுகள் தயாரிக்க பயன்படுகிறது. ☆ பண்டிகைகள் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. 3. பாலின் நன்மைகள் 1. எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது. 2. இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது. 3. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 4. இது ஓர் ஆற்றல் மூலமாகும். பதிலளிப்போமா! 1. பாலில் அதிகம் உள்ள சத்து கால்சியம் (கால்சியம்/இரும்புச்சத்து) 2. பாலில் சர்க்கரை, புரதம்  மற்றும் கொழுப்பு ஆகியவை உள்ளன.

Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Science in Everyday Life Read More »