Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Light

Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Light

அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க 

1. ஒளியானது எப்பொழுதும் __________ செல்லும், இந்தப்பண்பு __________ என அழைக்கப்படுகிறது. 

அ) வளைகோட்டில், நிழல்கள்

ஆ) நேர்கோட்டில், நிழல்கள் 

இ) நேர்கோட்டில், எதிரொளிப்பு

ஈ) வளைந்து பின் நேராக, நிழல்கள்

விடை : ஆ) நேர்கோட்டில், நிழல்கள் 

2. ஆடியில்படும் ஒளியானது __________ 

அ) ஊடுருவிச் செல்கிறது

ஆ) எதிரொளிப்பு அடைகிறது 

இ) உட்கவரப்படுகிறது

ஈ) விலகலடைகிறது

விடை : ஆ) எதிரொளிப்பு அடைகிறது 

3. __________ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது. 

அ) நீர் 

ஆ) குறுந்தகடு 

இ) கண்ணாடி

ஈ) கல்

விடை : இ) கண்ணாடி 

4. ஒளி என்பது ஒரு வகை __________ 

அ) பொருள் 

ஆ) ஆற்றல்

இ) ஊடகம்

ஈ) துகள்

விடை : ஆ) ஆற்றல் 

5. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் __________ 

அ) ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது. 

ஆ) ஒழுங்கான. எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது. 

இ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது. 

ஈ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது. 

விடை : ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது. 

6. பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?

அ) கண்ணாடி 

ஆ) மரம்

இ) நீர்

ஈ) மேகம் 

விடை : ஈ) மேகம்

7. ஒளியானது __________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.

அ) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது. 

ஆ) எதிரொளிக்கும் பரப்பை அணுகும்போது 

இ) எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது 

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை .

விடை : ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை 

(குறிப்பு: ஒளியானது எதிரொளிக்கும் பரப்பை அடைந்த பின் எதிரொளிப்பு நடைபெறுகிறது) 

8. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்? 

அ) பிளாஸ்டிக் தட்டு 

ஆ) சமதள ஆடி

இ) சுவர் 

ஈ) காகிதம்

விடை : ஆ) சமதள ஆடி 

9. சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது __________

அ) தோன்றாது. 

ஆ) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசையில் தோன்றும். 

இ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும். 

ஈ) காலையில் தோன்றிய நிழலை விடக் குறைவான நீளம் கொண்டது.

விடை : அ) தோன்றாது 

10. ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ___________

அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும் 

ஆ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது. 

இ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது. 

ஈ) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.

விடை : அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும் 

11.  பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?

அ) ஒளி நேர்கோட்டில் செல்கிறது. 

ஆ) ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை.

இ) எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது. 

ஈ) இடவல மாற்றம் அடைகிறது. 

  1. அ மற்றும் ஆ  
  2. அ மற்றும் ஈ 
  3. அ மற்றும் இ
  4. அ மட்டும்

விடை : i) அ மற்றும் ஆ 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் __________ ஆகும்

விடை: நேரான மாய பிம்பம் 

2. __________ எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது 

விடை: ஒளி

3. ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை __________ அடைகின்றன

விடை: எதிரொளிப்பு

4. சூரிய ஒளியானது, __________ வண்ணங்களின் கலவை ஆகும்

 விடை: பல (VIBGYOR)

5. ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும்  நிகழ்வு __________ எனப்படும்.

விடை: நிறப்பிரிகை

6. சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை __________ செய்கிறது. 

விடை: எதிரொளிக்க

7. __________ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம் 

விடை: முப்பட்டகம்

8. சொரசொரப்பான பரப்பின் மேல் __________ எதிரொளிப்பு நடைபெறுகிறது. 

விடை: ஒழுங்கற்ற

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில்,  சரியான கூற்றை எழுதுக 

1. ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன 

விடை : சரி

2. சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது

விடை : சரி

3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது. 

விடை : தவறு

சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. ஆனால் பெரிஸ்கோப் ஒன்றின் மூலம் கிடைக்கக்கூடிய கடைசி பிம்பமானது இடவலமாற்றம் இன்றி கிடைக்கிறது. 

4. சூரிய ஒளியைக் கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண  முடிகிறது 

விடை : சரி

5. புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது. 

விடை : சரி

6. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம், நேர்மாறு பிம்பம் ஆகும்.  விடை : சரி 

7. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்

விடை : தவறு

சரியான விடை : ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிலிருந்து மாறுபடலாம்

8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.

விடை : தவறு 

சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பமானது தலைகீழ் மாற்றம் அடைவதில்லை

 9. சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.

விடை : சரி 

10.  ஒரு பொருளின் நிழல், பொருள் இருக்கும் அதே பக்கத்தில் அமையும். 

விடை : தவறு

சரியான விடை : ஒரு பொருளின் நிழலானது ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் உருவாகும்.

 11. நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.  

விடை :  சரி

12. ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது  ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.

விடை :  சரி

IV. பொருத்துக

1. நேர்கோட்டுப் பண்பு  – அ. முதன்மை ஒளிமூலம்

2. சமதள ஆடி – ஆ. ஒளிராப் பொருள் 

3. மின்மினிப்பூச்சி – இ. பெரிஸ்கோப்

4. நிலா – ஈ. ஊசித்துளைக் காமிரா 

5. அகன்ற ஒளி மூலம் – உ. நிறப்பட்டை 

6. ஒழுங்கான எதிரொலிப்பு – ஊ. ஒளிரும் பொருள்

7. சூரியன் – எ. புறநிழல் 

8. ஏழு வண்ணங்கள் – ஏ. பளப்பளப்பான பரப்பு 

விடைகள் :

1. நேர்கோட்டுப் பண்பு  – ஈ. ஊசித்துளைக் காமிரா 

2. சமதள ஆடி – இ. பெரிஸ்கோப் 

3. மின்மினிப்பூச்சி – ஊ. ஒளிரும் பொருள்

4. நிலா – ஆ. ஒளிராப் பொருள்

5. அகன்ற ஒளி மூலம் – எ. புறநிழல் 

6. ஒழுங்கான எதிரொலிப்பு – ஏ. பளப்பளப்பான பரப்பு

7. சூரியன் – அ. முதன்மை ஒளிமூலம்

8. ஏழு வண்ணங்கள் – உ. நிறப்பட்டை

V. சுருக்கமாக விடையளி 

1. எதிரொளிப்பு விதிகளை, படத்துடன் கூறுக.

2. படத்தில் ஒரு பென்சில், ஓர் ஆடியில் மேலே இருக்கும் நிலையைக் காட்டுகிறது? எனில்

அ) ஆடியில் தோன்றும் பென்சிலின் பிம்பத்தை வரைக.

ஆ) பென்சிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஆடியில் எதிரொளிக்கப்பட்டு, கண்ணிற்கு அதன் பிம்பம் கிடைக்கிறது படம் வரைந்து காட்க.

3. ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?

விடை :

 மனிதனுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5m 

மனிதனுக்கும், மரத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 0.5m 

மரத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே மொத்த தொலைவு = 0.5 + 3.5 = 4m 

படுகோணம் ∠i = 4m  ∠r =4m

பொருளுக்கும், கண்ணிற்கும் இடையே உள்ள தெலைவு = கண்ணாடி மற்றும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைவு + ∠r 

= 3.5m + 4m =7.5m

4. ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன? 

• தாமாகவே ஒளிரக்கூடிய பொருட்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படும்.

• (எ.கா) சூரிய ஒளி, மின்சார பல்பு

5. நிலா ஓர் ஒளிரும் பொருளா? காரணம் கூறு.

• ஆம். சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும். 

• ஆனால் சந்திரன் தாமாகவே ஒளியை உமிழாது. 

• சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது.

6. ஒளியை உட்கவரும் பண்பினைப் பொருத்து, பொருள்களின் மூன்று வகைகள் யாவை?

• ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) தூய நீர்  

• பகுதி ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) சொரசொரப்பான கண்ணாடி 

• ஒளி ஊடுருவாப் பொருள்கள் (எ.கா) கல்

7. நிழல்களின் பகுதிகள் யாவை? 

• கரு நிழல்

• புற நிழல்

8. நிழல்களின் பண்புகள் யாவை?

• ஒளி ஊடுருவாப் பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன. 

• நிழல்கள் எப்பொழுதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உருவாகும். 

• ஒரு பொருளின் நிழலின் மூலம் அதன் தன்மையைக் கண்டறிய முடியாது. 

• பொருளின் நிறம் எதுவானாலும், நிழல் கருமையாகவே இருக்கும். 

• ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும். 

• நிழலின் அளவானது 

i. ஒளிமூலம் மற்றும் பொருள் மேலும் 

ii. பொருள் மற்றும் திரை இவற்றிற்கிடையே உள்ள தொலைவை சார்ந்துள்ளது.

9. சமதள ஆடி என்றால் என்ன? 

• சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும். 

• தன் முன் தோன்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்கும்.

10. முப்பட்டகம் என்றால் என்ன?

முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும். 

11. கண்ணுறு ஒளி என்றால் என்ன?

மனிதக் கண்ணால் கண்டறியக்கூடிய மின்காந்த கதிர்வீச்சின் வரம்பே கண்ணுறு ஒளி ஆகும். 

12. கீழ்க்காணும் பொருள்களை அட்டவணையில் சரியான இடத்தில் நிரப்புக. (நட்சத்திரம், செங்கல் சுவர், தாவரங்கள், கண்ணாடி கோள்கள், மின்பல்பு, எரியும் மெழுகுவத்தி) 

ஒளி மூலங்கள் 

நட்சத்திரம்

கோள்கள்

மின்பல்பு

எரியும் மெழுகுவத்தி

ஒளியை  எதிரொலிப்பை 

செங்கல் சுவர்

தாவரங்கள்

கண்ணாடி

13. 1 மீட்டர் 45 செ.மீ உயரமுடைய ஒரு சிறுவன், நீளமான ஓர் ஆடியிலிருந்து 2 மீட்டர் தொலைவில் நிற்கிறான், எனில் பின்வருவனவற்றை நிரப்புக. 

அ) சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு __________ 

விடை : 4 மீ 

ஆடியிலிருந்து சிறுவன் நிற்கும் தூரம் = 2 மீ (∠i)

∠i = ∠r = 2 மீ

எனவே சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் உள்ள தொலைவு = சிறுவனிடமிருந்து கண்ணாடியின் தூரம் + கண்ணாடிக்கும் பிம்பத்திற்கும் உள்ள தூரம். 

= 2 மீ + 2 மீ = 4 மீ

ஆ) ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் __________

சமதள ஆடி ஏற்படுத்தும் பிம்பம் நேரானது. எனவே ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் 1மீ 45 செ.மீ ஆகும். 

இ) சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு __________ 

சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால் சிறுவனுக்கும், ஆடிக்கும் உள்ள தொலைவு i = 1மீ

∠i = ∠r = 1மீ 

எனவே ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 1மீ ஆகும்

.

14. ஏதேனும் ஒரு பொருள் ஒன்றையும் ஊசித்துளைக் காமிரா ஒன்று உருவாக்கும் அப்பொருளின் பிம்பத்தையும் வரைக.

விடை :

15. அவசர கால ஊர்திகளில் (AMBULANCE) என்ற வார்த்தை வல, இடமாக மாற்றி எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

• சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது. 

• ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக ‘AMBULANCE’ என நேராகத் தெரியும்.

16. ஆடியில் தோன்றும் சில பெரிய ஆங்கில எழுத்துகளின், பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதர பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? விளக்குக. 

• A, H, I, M, O, T, U, V, W, X மற்றும் Y போன்ற 11 எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்கு ‘சமச்சீர் தன்மையே’ காரணமாகும். 

• மற்ற எழுத்துக்களின் (B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S மற்றும் Z) பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதற்கு ‘இடவல மாற்றம்’ காரணமாகும்.

17. M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M1 என்ற சமதள ஆடியோடு 45° படுகோணத்தை ஏற்படுத்துகிறது. 

விடை :

அ. __________ __________ ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.

விடை : BC, CD 

ஆ. __________ __________  ஆகியவை படுகதிர்கள் ஆகும். 

விடை : AB, BC 

இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?

விடை : 45° 

ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன?

விடை : 45°

18. ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?

விடை :

 19. ஒளியின் எதிரொளிப்பு என்றால் என்ன?

எந்தவொரு பொருளின் மேற்பரப்பையும் அடைந்த பிறகு, ஒளி கதிர்கள் மீண்டு வருவது ஒளியின் எதிரொளிப்பு எனப்படும். 

20. ஓர் ஒளிக்கதிர் 50° கோணத்தில் ஒரு சமதள ஆடியில் விழுகிறது எனில் எதிரொளிப்புக்கோணம் என்ன? 

படுகோணத்தின் மதிப்பு = 90° – 50° = 40° (∠i)

ஒளி எதிரொளிப்பு விதியின்படி, படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம்.

i = r

∠i = 40° ∠r = 40° 

எனவே எதிரொளிப்புக்கோணம் = 40° ஆகும். 

21. சமதள ஆடியில் இடவல மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன? 

சமதள ஆடியின் இடவல மாற்றப் பண்பின் காரணமாக ஆங்கில எழுத்து ‘b’ ஆனது ‘d’ போன்று தெரியும். 

22. வெள்ளொளியின் நிறத்தொகுப்பை எவ்வாறு பெறலாம்?

• ஒரு வெள்ளொளியானது முப்பட்டகத்தின் ஒரு சமதளப் பரப்பின் வழியே செல்லும்போது, மற்றொரு சமதளப்பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாக பிரிகையடையும். இந்நிகழ்வு நிறப்பிரிகை ஆகும். 

• இதில் பெறப்படும் நிறங்கள் நிறத்தொகுப்பு எனப்படும்.

23. நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும் போது, ஏன் அது வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது? 

• நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது. 

• நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடிகிறது. 

24. நிழல் என்றால் என்ன? நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் யாவை? 

• ஒளி ஊடுருவாப் பொருளானது, ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை . எனவே நிழல் உருவாகிறது. 

• சூரிய ஒளி, ஒளி ஊடுருவாப் பொருள், திரை ஆகியவை நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் ஆகும்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி. 

1. ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு என்றால் என்ன? படத்துடன் விவரி. 

ஒழுங்கான எதிரொளிப்பு : 

• எதிரொளிக்கும் பரப்பு வழவழப்பாகவும் சமதளமாகவும் இருப்பின் ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறும். 

• ஒழுங்கான எதிரொளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்களாகப் பரப்பின் மேல் விழுந்து இணைகதிர்களாகவே எதிரொளிக்கப்படுகின்றன.

ஒழுங்கற்ற எதிரொளிப்பு : 

• பரப்பு சொரசொரப்பாக இருப்பின் ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறும் 

• இந்நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன. 

2. ஒளிரும் மற்றும் ஒளிரா மூலங்கள் இவற்றிற்கிடையான வேறுபாட்டைக் கூறுக. ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக. 

ஒளிரும் பொருள்கள் 

ஒளிரும் பொருள்கள் அவற்றின் சொந்த ஒளியை வெளிபடுத்தும் பொருள் 

(எ.கா) மெழுகுவர்த்தி, பல்பு, நட்சத்திரங்கள், சந்திரன் 

ஒளிரா பொருள்கள்

ஒளிராத பொருள்கள் ஒளிரும் உடல்களிலிருந்து  ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்கள்

(எ.கா) மனிதன், தாவரம், புத்தகம் 

3. அன்றாட வாழ்வில் நீ காணும் ஒளியின் நேர்க்கோட்டு பண்பு நிகழ்வுகள் இரண்டினை கூறுக. 

• மரங்களின் கிளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல் 

• சிமெண்ட் கிரிலின், சிறு துளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்.

• லேசர் மற்றும் டார்ச் விளக்கின் ஒளி நேராக செல்லுதல் 

4. எதிரொளிப்பு மற்றும் நிழல் – வேறுபடுத்துக. 

எதிரொளிப்பு

1. எதிரொளிப்பு என்பது ஒரு ஒளியானது நேர் கோட்டில் சென்று பொருள் மீது பட்டு மீண்டும் திரும்பி விலகி செல்வது ஆகும்.

2. ஒளியானது மூலத்தில்இருந்து மற்றும் மற்றொரு ஒளி மூலத்திலிருந்து வருகிறது. 

3. பிரதிபலிப்பு படத்தில் விவரங்களை அளிக்கிறது.

நிழல்

1. ஒளி ஊடுருவாப் பொருள் தன் வழியே ஒளி செல்ல அனுமதிக்கதால் ஏற்படுவது நிழல் 

2. இது ஒரு ஒளி மூலத்தைத் தடுப்பதிலிருந்து உருவாகிறது. 

3. நிழல் பொருள்களின் வெளிப்புறத்தை மட்டுமே தருகிறது. 

5. சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளைக் கூறுக. 

• சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது. 

• சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும். 

• சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும். 

• சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும் பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்.

• சமதள ஆடியின் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும். 

6. பின்வரும் படங்களின் மூலம் நீவீர் அறிவது என்ன?

• ஒளியானது நேர்கோட்டில் செல்லும் 

• ஒளியானது தானே வளைந்து செல்லாது 

• இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும் 

• மேற்கண்ட படத்திலிருந்து B படமானது ஒளியின் முக்கியமான இப்பண்பினை விளக்குகிறது. 

• படம் A-வில் ஒளியானது தானாகவே வளைகிறது. இந்த பண்பு ஒளியில் நடைபெறாத நிகழ்வாகும். 

7. பின்வருவனவற்றை வரையறுக்க. 

i) படுகதிர்

ii) எதிரொளிப்புக் கதிர் 

iii) குத்துக்கோடு 

iv) படுகோணம்

i) படுகதிர் : 

எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும். 

ii) எதிரொளிப்புக் கதிர் :

எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக் கதிர் எனப்படும். 

iii) குத்துக்கோடு : 

படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும். 

iv) படுகோணம் :

படுகதிர்க்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் எனப்படும் 

8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களை ஊசித்துளைக் காமிரா காமிரா உருவாக்கும் பிம்பங்களோடு ஒப்பிடுக. 

ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம்

1. மெய் பிம்பம்

2. பிம்பத்தின் அளவு பொருளின் அளவுடன் ஒப்பிடும்போது மாறுபடலாம் 

3. தலைகீழ் பிம்பம்

சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்

1. மாய பிம்பம்

2. பிம்பம் மற்றும் பொருளின் அளவு சமம் 

3. நேரான பிம்பம்

கணக்கியல் தீர்வுகள்

ஒளி எதிரொளிப்பு விதிகள்

1. படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) சமம்

i = r

2. படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக்கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்

எடுத்துக்காட்டு 1

படத்தில், படுகதிர் AB, 27° கோணத்தை குத்துக்கோட்டுடன் ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன?

தீர்வு 

படுகோணம் (i) = 27° 

எதிரொளிப்பு விதியின் படி, 

படுகோணம் = எதிரொளிப்புக்கோணம்

எனவே எதிரொளிப்புக்கோணம் (r)= 27°

எடுத்துக்காட்டு 2.

ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில் பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது. எனில், 

i. படுகோணத்தின் மதிப்பு என்ன?

ii. எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன? 

iii. படுகதிருக்கும், எதிரொளிப்புக்கதிருக்கும்இடையே உள்ள கோணம் என்ன? 

iv. எதிரொளிப்புக்கதிருக்கும், எதிரொளிக்கும் தளத்திற்கும் இடையே உள்ள கோணம் என்ன ? 

தீர்வு .

i. படுகோணம் =: i = 90° – 43° = 47°

ii. எதிரொளிப்புக் கோணம் = r = i = 47°

iii. i + r = 47° + 47° = 94°

iv. x  = 90° – r = 90° – 47° = 43°

கேள்வி : ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?

விடை :

 மனிதனுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5m 

மனிதனுக்கும், மரத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 0.5m

மரத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே மொத்த தொலைவு = 0.5 + 3.5 = 4m 

படுகோணம் ∠i = 4m  ∠r =4m

பொருளுக்கும், கண்ணிற்கும் இடையே உள்ள தெலைவு = கண்ணாடி மற்றும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைவு + ∠r 

= 3.5m + 4m =7.5m

கேள்வி : ஏதேனும் ஒரு பொருள் ஒன்றையும் ஊசித்துளைக் காமிரா ஒன்று உருவாக்கும் அப்பொருளின் பிம்பத்தையும் வரைக.

விடை

கேள்வி : M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M1 என்ற சமதள ஆடியோடு 45° படுகோணத்தை ஏற்படுத்துகிறது. 

விடை :

அ. __________ __________ ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.

விடை : BC, CD 

ஆ. __________ __________  ஆகியவை படுகதிர்கள் ஆகும். 

விடை : AB, BC 

இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?

விடை : 45° 

ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன?

விடை : 45°

கேள்வி : ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?

விடை :

மாணவர் செயல்பாடு

செயல்பாடு: 1

தேவையானவை: மூன்று காலியான தீப்பெட்டிகள், குண்டூசி, மெழுகுவத்தி மற்றும் மரத்துண்டுகள்

செய்முறை : மூன்று காலியான தீப்பெட்டிகள் மற்றும் மரத்துண்டுகளைப் படத்தில் காட்டியுள்ள படி அமைக்கவும், பின் தீப்பெட்டிகளின், உள் பெட்டியின் மையத்தில் ஒரு துளையிட்டு, மூன்று துளைகளும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு அமைக்கவும். எரியூட்டப்பட்ட ஒரு மெழுகுவத்தியின் சுடரை, அமைப்பின் ஒரு புறம் உள்ள துளையின் அருகே வைத்து, மறுமுனையில் உள்ள துளையின் வழியாக எரியும் சுடரைக் காணவும். எரியும் சுடர் தெரிகிறதா? இப்பொழுது, உள்பெட்டிகளின் உயரத்தை மாற்றி அமைத்து, எரியும் சுடரைக் காண முயற்சி செய். எரியும் சுடர் தெரிகிறதா? ஒளியின் பாதைபற்றிய இந்தச் செயல்பாட்டின் மூலம் என்ன புரிந்து கொள்கிறாய்?

அறிந்து கொள்

காமிராவின் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில், ஊசித்துளை காமிரா, சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்குச் சோலாகிராபி என்று பெயர். மேலும், ஊசித்துளை காமிரா நிலையான பொருள்களைப் புகைப்படம் எடுப்பதற்கும், சூரிய கிரகணத்தைக் காண்பதற்கும், அதனைப் பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.

செயல்பாடு: 2

ஊசித்துளை காமிரா செய்வோமா! 

தேவையானவை: இரு செவ்வக வடிவ கடினத்தாள், கார்பன் தாள், பகுதி ஒளி ஊடுருவும் தாள் மற்றும் ஒட்டும் பசை.

செவ்வக வடிவ கடினத்தாள்களைப் பயன்படுத்திப் படத்தில் காட்டியுள்ளபடி இரு உருளை வடிவ குழாய்களை , ஒன்றின் விட்டம் மற்றொன்றைவிடக் குறைவாக இருக்குமாறு செய்யவும். இதன் மூலம் ஒரு குழாய், மற்றொன்றின் உள்ளே நகரும் வகையில் அமையும். பெரிய குழாயின் ஒரு முனையில் கார்பன் காகிதத்தை ஒட்ட வைத்து, அதன் மையத்தில் ஊசியின் மூலம் சிறிய துளையென்றை இடவும். சிறிய குழாயின் ஒரு முனையில் பகுதி ஊடுருவும் தாளை வைத்து மூடவும். சிறிய குழாயின் பகுதி ஊடுருவும் தாள் ஒட்டிய முனை உள்ளே இருக்குமாறு, சிறிய குழாயை, பெரிய குழாயின் உள்ளே நகரும்படி அமைக்கவும். எரியும் மெழுவத்தி ஒன்றின் சுவாலையைத் துளையின் வழியே காண்க. மெழுகுவத்தியின் அருகே செல்லச் செல்ல, சிறிய பிரகாசமான பிம்பத்தை நீ காணலாம். குழாயினை ஒன்றுக்கொன்று நகர்த்துவதன் மூலம் பிம்பத்தின் அளவை மாற்ற முடியும். ஊசித்துளை காமிராவைக் கொண்டு, பகல் நேரங்களில் சன்னலுக்கு வெளியே உள்ள காட்சிகளைக் காண். நீ காணும் காட்சிகளின் பிம்பங்கள் எவ்வாறு அமைந்தன? நேரான பிம்பமா? பிரகாசமான பிம்பமா? தலைகீழ் பிம்பமா? தெளிவான பிம்பமா?

செயல்பாடு : 3 

பெரிஸ்கோப் ஒன்றை உருவாக்குவோமா!

பெரிஸ்கோப் ஒன்றினை உருவாக்க, காலியான ஊதுவத்தி பெட்டி மற்றும் இரு சமதள ஆடிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள். படத்தில் காட்டியுள்ளவாறு இரு சமதள

ஆடிகளையும், ஒன்றுக்கொன்று 45° கோணத்தில் அமைக்கவும்

மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு, தூரத்தில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் குழாயின் பகுதி-1 வழியே உள்ளே சென்று கண்ணாடி 2 இல் விழுகிறது. படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம் என்பதால் எதிரொளிப்புக் கதிர்கள் குழாயின் வழியே கீழ் நோக்கிச் சென்று, கண்ணாடி 3இல் விழுந்து மீண்டும் எதிரொளிக்கப்படுகிறது. எதிரொளிக்கப்படும் கதிர்கள், குழாயிலிருந்து வெளியே சென்று நம் கண்களை வந்து அடைகின்றன. பெரிஸ்கோப் எதிரொளிப்பு விதியின்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டாயா?

செயல்பாடு : 4 

கீழ்க்காணும் பொருள்களை ஒளி ஊடுருவும், பகுதி ஊடுருவும் மற்றும் ஒளி ஊடுருவாப் பொருள்கள் என வகைப்படுத்தலாமா? 

தெளிவான ப்ளாஸ்டிக் அளவுகோல், ஒட்டு நாடா (cello tab), கண்ணாடிக் குவளையில் உள்ள நீர், திசு காகிதம் (tissue paper) , கண்ணாடிக் குவளை, மண்ணெண்ணெய், தேங்காய் எண்ணெய், நோட்டு காகிதம், கடின அட்டை, பால், அலுமினியத் தாள், வண்ண ப்ளாஸ்டிக் மூடி, சொரசொரப்பான கண்ணாடித்துண்டு, நீருள்ள அளவு சாடி, மரத்துண்டு)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களை ஓர் இருட்டறையில் வரிசையாக வைக்கவும். ஒரு டார்ச் விளக்கின் ஒளியை, ஒவ்வொரு பொருள்களின் ஒரு பக்கம் செலுத்தவும். பொருள்களின் மறுபுறம் வெளி வரும் ஒளியின் அளவைக்கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அட்டவணைப்படுத்துக. 

செயல்பாடு : 5

1. செயல்பாடு

செவ்வக வடிவ கடின அட்டையின் மையத்தில் ஒரு துளையிடவும். பின் அத்துளையின் அருகே ஒளியூட்டப்பட்ட மின் விளக்கை வைக்கவும்

2. உற்றுநோக்குதல்

மையத்தில் ஒளிப்புள்ளியுடன் கூடிய நிழல் திரையில் தெரிகிறது.

3. அறிதல்

ஒளிக்கதிர்கள் அட்டையில் உள்ள துளையின் வழியே மட்டும் செல்கின்றன. எனவே, திரையில் ஒளிப்புள்ளி தோன்றுகிறது. மற்ற ஒளிக்கதிர்களை அட்டை தடுத்து விடுவதால் திரையில் கருமை நிறம் தோன்றுகிறது.

1. செயல்பாடு

ஒளியூட்டப்பட்ட மின் விளக்கின் பாதையில் ஒரு பென்சிலைப் படத்தில் காட்டியுள்ள வைக்கவும்.

2. உற்றுநோக்குதல்

பென்சிலின் நிழல் திரையில் உருவாகிறது.

3. அறிதல்

நிழலின் உருவம் மற்றும் அளவு, ஒளி ஊடுருவாப் பொருளின் அளவுக்கு நேர்த்தகவில் அமையும்.

செயல்பாடு : 6

தேவையானவை: ஒரு வெள்ளைத்திரை, உருளைவடிவ ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் உருளை வடிவ மரக்கட்டை வெவ்வேறு அளவில் உள்ள மூன்று மின் விளக்குகள்.

முதலில் ஒவ்வொரு மின்விளக்கையும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைத்து உருளைவடிவப் பொருளின் கருநிழல் மற்றும் புறநிழல் ஆகியவற்றை ஆராய்க. மின்விளக்கு மற்றும் உருளை, உருளை மற்றும் திரை ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொலைவு ஒரே அளவில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. மின்விளக்கின் அளவு (பரிமாணம்) குறையக் குறைய கருநிழலின் அளவு பெரிதாகி வருவதைக் காணலாம். மின்விளக்கு ஒரு புள்ளி ஒளிமூலமாக இருப்பின் புற நிழல் திரையில் தோன்றாது. முழுவதும் கருநிழல் மட்டுமே திரையில் தோன்றும். இதற்கு காரணம் என்ன? சிந்திக்க.

செயல்பாடு :7

பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் பரப்பு ஏற்படுத்தும் பிம்பத்தின் தன்மையை எழுதுக

செயல்பாடு : 8

EINSTEIN என்ற வார்த்தையில் எட்டு எழுத்துகள் உள்ளன. 

1. EINSTEIN என்ற வார்த்தையைப் படத்தில் உள்ள பெயர்ப்பலகையில் எழுதுக

 2. பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துகள், சமதளஆடியில் தோன்றுவதை எழுதுக.

3. எழுத்துக்கள் எதிரொளிக்கப்பட்டப்பிறகு, எத்தனை எழுத்துக்கள் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளன.

4. எழுத்துகள் எதிரொளிக்கப்பட்ட பிறகு, மாறாத – எழுத்துகளை எழுதுக.

விடைகள் 

(iii) எழுத்துக்கள் (E, N, S)

(iv) I, T

ஆம்புலன்சுகளில் ” AMBULANCE ” என்ற வார்த்தை பின்னோக்கி ஏன் இது போன்று எழுதப்படுகிறது? 

சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இங்குப் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்

செயல்பாடு : 9

வானவில் ஒன்றை உருவாக்கலாமா!

நீங்கள் வானத்தில் வானவில்லைப் பார்த்ததுண்டா? வானவில் ஒன்றை வகுப்பறையில் உருவாக்கலாமா? அகன்ற, உயரமான ஒரு பாத்திரம் ஒன்றை நேரடி சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வைக்கவும். படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு சமதள ஆடியைப் பாத்திரத்தினுள் வைக்கவும். இப்போது நீங்கள் சூரிய ஒளியானது கூரையின்மீது அல்லது வெள்ளைச்சுவரின் மேல் பிரதிபலிப்பதைக் காணலாம். அடுத்து பாத்திரத்தில் மெதுவாக நீரை ஊற்றவும். தண்ணீர் குறிப்பிட்ட மட்டத்தில் வரும் போது, சுவரில் அழகான வானவில் தோன்றும் நிறங்கள் கிடைக்கும். ஒருவேளை நிறங்கள் தெளிவாக இல்லையெனில், கண்ணாடியின் நிலையைச் சற்றே சரிசெய்யவும். சூரிய ஒளியில் இவ்வாறு தோன்றுவது ஒளியின் நிறமாலை என்று அழைக்கப்படுகிறது.

வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?

 1. சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன.

2. சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது ஆகும். எனவே, சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.

செயல்பாடு : 10

வெள்ளொளி ஆனது பல நிறங்களைக் கொண்டது என்றும்; அதனை முப்பட்டகம் மூலம் பிரிக்க இயலும் என்றும் நாம் அறிந்துகொண்டோம். இதே போன்று பல நிறங்களைக் கொண்டு மீண்டும் வெள்ளை நிறத்தைப் பெற முடியுமா? முயற்சி செய்யுங்கள்.

பல வண்ணத் தீட்டுக் கோலை எடுத்துக்கொள்ளுங்கள். வானவில்லின் நிறங்களைக் கொண்ட வண்ணத் தீட்டுக் கோல்களை தேர்ந்தெடுங்கள். ஒரு வெள்ளைத்தாளில், தேர்ந்தெடுத்த வண்ணத் தீட்டுக் கோலை ஒவ்வொன்றாக ஒன்றின் மீது ஒன்றாக வரையுங்கள். வெள்ளை நிறம் பெற முடிந்ததா?

ஒளியானது நேர்கோட்டில் செல்லும். ஒளியானது தானே வளைந்து செல்லாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். இது ஒளியின் முக்கியமான பண்பு ஆகும்.

அல் -ஹசன் -ஹயத்தம் என்ற அறிவியல் அறிஞர் ஒளி, காட்சி மற்றும்ஒளியியல் தொடர்பான புரிதலுக்கு, முக்கிய பங்காற்றியவர். சிறு துளை வழியாக வரும் ஒளி, நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தைத் தோற்றுவிப்பதை அவர் கண்டறிந்தார். அத்தகைய சோதனைகளின்அடிப்படையில், கண்ணுக்குப் புலனாகும் காட்சி என்பது வெளிப்புற ஒளி மூலங்களில் இருந்து வரும் கதிர்கள், கண்ணுக்குள் நுழைகிறது என்பதைக் கண்டறிந்தார். ஒளியுடன் கூடிய சோதனைகளைச் செய்து, ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் இவரே ஆவார்.

நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல் விளக்கு (tube light) ஒரு வகையான வாயுவிறக்க ஒளி மூலம் ஆகும். இது ஒளிர்தலின் மூலம் நமக்குக் கண்ணுரு ஒளியைத் தருகிறது. குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம், பாதரச ஆவியைத் தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள் குழாயின் உட்பகுதியில் பூசப்பட்ட பாஸ்பரஸின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிரச் செய்கின்றன.

சந்திரன் ஓர் ஒளிரும் பொருளா?

சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும். ஆனால், சந்திரன் தாமாகவே ஒளியை உமிழும் மூலம் அல்ல. அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனைப் பூமிக்குப் பிரதிபலிக்கிறது. நாம் சந்திரனைப் பார்க்கும் போது சந்திரனின் ஒளிரும் ஒரு பாதியை மட்டுமே காண்கிறோம். சந்திரனின் ஒரு பாதி எப்பொழுதும் சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம் ஒளியைப் பெறுகிறோம்

தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது சூரிய ஒளி ஆகும். எனவே, தாவரங்கள் பெரும்பாலும் சூரிய ஒளியைச் சார்ந்துள்ளன. மனிதர்களும் விலங்குகளும் தாம் உண்ணும் உணவிலிருந்து கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துகளைப் பெற்றுக் கொள்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள கார்பன் – டைஆக்சைடு மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *