Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 6

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 6

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

வாழ்வியல்: திருக்குறள்

நுழையும்முன்

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்” 

என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம்.

அழுக்காறாமை 

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

பொருள் : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க

நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்

பொருள் : பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.

புறங்கூறாமை 

3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்

பொருள்: ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது.

4. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.* 

பொருள்: பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை.

அருளுடைமை

5. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

பொருள்: அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

6. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து

பொருள்: ஒருவர் தம்மைவிட மெலிந்தவரை துன்புறுத்தும்போது, தம்மைவிட வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

வாய்மை

7. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.* 

பொருள்: வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

8. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்

பொருள்: ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

9. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் 

உள்ளத்துள் எல்லாம் உளன்.

பொருள்: உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.

இறைமாட்சி

10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு. 

பொருள்: பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயல்களாகும்.

நூல் வெளி  

திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார். 

தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. இதில் அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்க. 

1. வாய்மை எனப்படுவது ——. 

அ) அன்பாகப் பேசுதல்

ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல் 

இ) தமிழில் பேசுதல்

ஈ) சத்தமாகப் பேசுதல் 

[விடை : ஆ. தீங்குதராத சொற்களைப் பேசுதல்] 

2. ——–  செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும். 

அ) மன்னன்

ஆ) பொறாமை இல்லாதவன் 

இ) பொறாமை உள்ளவன்

ஈ) செல்வந்தன் வந்தன்

[விடை : இ. பொறாமை உள்ளவன்] 

3. ‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——- 

அ) பொரு + செல்வம்

ஆ) பொருட் + செல்வம் 

இ) பொருள் + செல்வம்

ஈ) பொரும் + செல்வம் 

[விடை : இ. பொருள் + செல்வம்] 

4. ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ 

அ) யா + எனின்

ஆ) யாது + தெனின் 

இ) யா + தெனின்

ஈ) யாது + எனின்

[விடை : ஈ. யாது + எனின்] 

5. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ——- 

அ) தன்நெஞ்சு 

ஆ) தன்னெஞ்சு 

இ) தானெஞ்சு 

ஈ) தனெஞ்சு 

[விடை : ஆ. தன்னெஞ்சு] 

6. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ——— 

அ) தீதுண்டோ

ஆ) தீதுஉண்டேத 

இ) தீதிண்டோ

ஈ) தீயுண்டோ

[விடை : அ. தீதுண்டோ] 

சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்துக. 

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல். 

ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல். 

இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல். 

ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

[ விடை : ஆ, ஈ, இ, அ] 

ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல். 

ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல். 

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல். 

குறு வினா

1. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்? 

ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும். 

2. வாழும் நெறி யாது? 

ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும். 

3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்? 

உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர். 

கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க. 

விடை : 

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 

பூரியார் கண்ணும் உள.

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை. 

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது. 

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு. 

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல். 

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் 

உள்ளத்துள் எல்லாம் உளன். 

விடை : 3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

        உள்ளத்துள் எல்லாம் உளன்.

சொல்லும் பொருளும் 

அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை 

அழுக்காறு – பொறாமை

ஆக்கம் – செல்வம்

கேடு – வறுமை

ஏதிலார் – பிறர் 

பூரியார் – இழிந்தவர் 

வாய்மை – உண்மை 

செவ்வியான் – சான்றோர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *