Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 2

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல

நுழையும்முன்

தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர்.இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம்.

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல

ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…) 

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும் 

செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…) 

பகைவென்ற திறம்பாடும் பரணிவகைசெழும்

பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகைவான் 

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும்செம் 

பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரிவான்

முகிலினும் புகழ்படைத்த உபகாரிகவிச் 

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறிஇந்த 

வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

உடுமலை நாராயணகவி

சொல்லும் பொருளும் 

ஒப்புமை – இணை 

அற்புதம் – வியப்பு 

முகில் – மேகம் 

உபகாரி – வள்ளல்

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

நூல் வெளி 

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ———-

அ) கலம்பகம்

ஆ) பரிபாடல் 

இ) பரணி 

ஈ) அந்தாதி

 [விடை : இ. பரணி]

 2. வானில் ———– கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில் 

ஆ) முகில் 

இ) துகில் 

ஈ) துயில் 

[விடை : ஆ. முகில்] 

3. “இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  ———-

அ) இரண்டு + டல்ல

ஆ) இரண் + அல்ல 

இ) இரண்டு + இல்ல

ஈ) இரண்டு + அல்ல

 [விடை : ஈ. இரண்டு + அல்ல]

4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ———- 

அ) தந்து + உதவும்

ஆ) தா + உதவும் 

இ) தந்து + தவும்

ஈ) தந்த + உதவும் 

[விடை : அ. தந்து + உதவும்]

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

அ) ஒப்புமைஇல்லாத

ஆ) ஒப்பில்லாத 

இ) ஒப்புமையில்லாத

ஈ) ஒப்புஇல்லாத

 [விடை : இ. ஒப்புமையில்லாத] 

குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

❖ தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும். 

❖ சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.

❖ தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும். 

2. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக. 

❖ முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி. 

❖ புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறுவினா

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? 

❖ பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம். 

❖ பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார். 

சிந்தனை வினா 

தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன? 

❖ சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது. 

❖ கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின. 

❖ தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன. 

❖ குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது. 

❖ எனவே, தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

கற்பவை  கற்றபின்  

1. தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக. 

1. தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம். 

❖ அதியன் (ஔவைக்கு உதவியவன்)

❖ யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறு நூறு தொகுப்பித்தவன்) 

❖ பூரிக்கோ (குநற்தொகையைத் தொகுப்பித்தவன்) 

❖ பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்) 

❖ பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்) 

❖ சடையப்ப வள்ளல் (கம்பராமாயணம் எழுத உதவியவர்) 

❖ சீதக்காதி, அபுல் காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்) 

❖ சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்) 

2. தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக. 

❖ கீழ்க்கணக்கு

❖ மேல்கணக்கு

❖ அறஇலக்கியம்

❖ பெருங்காப்பியம்

❖ சிறு காப்பியம்

❖ சிறுகதை 

❖ மரபுக்கவிதை 

❖ புதுக்கவிதை 

❖ புதினம் 

❖ நாட்டுப்புற இலக்கியம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *