Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 1

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 1

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

கவிதைப்பேழை: எங்கள் தமிழ்

நுழையும் முன் 

உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி. அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது; காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்வது. அத்தகு தமிழ்மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம்.

*அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

 எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

 இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும்  –  ஊக்கப்படுத்தும்

குறி  –  குறிக்கோள்

விரதம்  –  நோன்பு

பொழிகிற  –  தருகின்ற

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும்  உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

நூல் வெளி  

இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர்     தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் ———-

அ) வழி

ஆ) குறிக்கோள் 

இ) கொள்கை 

ஈ) அறம் 

[விடை : அ வழி]

2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ———-

அ) குரல் + யாகும்

ஆ) குரல் + ஆகும் 

இ) குர + லாகும்

ஈ) குர + ஆகும்

[விடை : ஆ. குரல் + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ———-

அ) வான்ஒலி

ஆ) வானொலி 

இ) வாவொலி

ஈ) வானெலி

[விடை : ஆ. வானொலி ] 

நயம் அறிக 

1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

எ.கா. 

ருள்நெறி கொல்லா ல்லா

துவே கொள்கை ன்றும் 

2. ‘எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. 

எ.கா. 

ருள் கொல்லா அன்பும் 

பொருள் எல்லா இன்பம் 

3. ‘எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

எ.கா.

தரலாகும்  புகழாது  ஊக்கிவிடும்

குரலாகும் இகழாது  போக்கிவிடும்

குறு வினா 

1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

❖ நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்.

❖ கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும். 

❖ நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். 

2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக. 

❖ தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.

❖ தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார். 

சிறு வினா

‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 

❖ நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகின்றது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

❖ தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார். 

❖ கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

❖ நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும். 

சிந்தனை வினா

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்? 

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

கற்பவை  கற்றபின்

1. “எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க. 

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும் 

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது 

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக 

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே 

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும் 

இன்பம் பொழிகிற வானொலியாம் 

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 

2. பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க. 

கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது 

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்!….(கத்தியின்றி…)

கண்ட தில்லை கேட்ட தில்லை

சண்டை யிந்த மாதிரி 

பண்டு செய்த புண்ணி யந்தான்

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

பலித்த தேநாம் பார்த்திட!….(கத்தியின்றி…)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *