Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 4

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது

இலக்கணம்: நால்வகைச் சொற்கள்

பின்வரும் தாெடர்களில் உள்ள நால்வகைச் சாெற்களை வகைப்படுத்துக.

1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.

விடை : பெயர்ச்சொல் – பேருந்தில்

2. நாள்தாேறும் திருக்குறள் படி.

விடை : இடைச்சொல் – ஐ (திருக்குறளை)

3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர்.

விடை : உரிச்சொல் – சால (சாலச்சிறந்தது)

4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சாெல்லை எழுதுக.

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

விடை : இடைச்சொல் – கு (செவிக்கு)

மதிப்பீடு

I. சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு

1. அ) படித்தாள்    ஆ) ஐ    இ) மற்று    ஈ) கு

விடை : படித்தாள்

2. அ) மதுரை    ஆ) கால்    இ) சித்திரை    ஈ) ஆல்

விடை : ஆல்

3. அ) சென்ற    ஆ) வந்த    இ) சித்திரை    ஈ) நடந்த

விடை : சித்திரை

4. அ) மாநாடு    ஆ) ஐ    இ)    உம்    ஈ) மற்று

விடை : மாநாடு

II. குறுவினாக்கள்

1. சாெல் என்றால் என்ன?

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தாெடரந்து வந்தும் பொருள் தரும். இவவாறு பொருள் தருபவை சாெல் எனப்படும்.

2. சாெற்களின் வகைகளை எழுதுக.

இலக்கண அடிப்படையில் சாெற்கள் பெயரச்சாெல், வினைச்சாெல், இடைச்சாெல், உரிச்சாெல் என நான்கு வகைப்படும்.

3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை எவ்வாறு வழங்குகிறோம்?

பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை இடைச்சொல் என்று வழங்குகிறோம். இது தனித்து இயங்காது.

மொழியை ஆள்வோம்

1. பெயர்ச்சொல் என்றால் என்ன? சான்று தருக

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

2. இடைச்சொல் என்றால் என்ன? சான்று தருக

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.

(எ.கா.)

  • உம் – தந்தையும் தாயும்
  • மற்று – மற்றொருவர்
  • ஐ – திருக்குறளை

1. உரிச்சொல் என்றால் என்ன? சான்று தருக

பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்

(எ.கா.)

  • மா – மாநகரம்
  • சால – சாலச்சிறந்தது

மொழியை ஆள்வோம்

I. கீழ்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தாெழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தாெடங்கியவர்.

1906 ஆம் ஆணடு அக்டாேபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாயச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் யார்?

சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் வ.உ.சிதம்பரனார்.

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

வ. உ.சி. அவர்கள் பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?

  • வழக்கறிஞர்
  • எழுத்தாளர்
  • பேச்சாளர்
  • தாெழிற்சங்கத் தலைவர்

5. வ. உ. சி. அவரகள் புலமை பெற்றிருந்த மாெழிகள் யாவை?

வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்

II. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

  • ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

  • ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

  • அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

  • அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.

  • அஃது அது ஒரு இனிய பாடல்.

III. அகரவரிசைப்படுத்து

பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.

விடை :

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து,

மொழியோடு விளையாடு

I. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.

சொற்கள்உண்டுஇல்லை
எனக்குஎனக்குண்டுஎனக்கில்லை
வடக்குவடக்குண்டுவடக்கில்லை
பந்துபந்துண்டுபந்தில்லை
பாட்டுபாட்டுண்டுபாட்டில்லை

II. கட்டங்களில் உள்ள சொற்களை கொண்டு தொடர்களை உருவாக்குக

பாரிவீட்டுக்குவந்தன
எழிலிவந்தான்
மாணவர்கள்வந்தது
மாடுவந்தார்கள்
மாடுகள்வந்தாள்
  • பாரி வீட்டுக்கு வந்தான்
  • எழிலி வீட்டுக்கு வந்தாள்
  • மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்
  • மாடு வீட்டுக்கு வந்தது
  • மாடுகள் வீட்டுக்கு வந்தன

III. கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக

கும்பேசின்
ருண்தா
ந்றுடிய்
ன்தும்செ
மாடுற்று
க்கிறான்

பெயர்ச்சொல்

  • குமரன், கரம், மாடு, பேருந்து, சிவன், தாய், வண்டி, செறு, பண், பசி, நகரம்

வினைச்சொல்

  • நடக்கிறாள், செய்தான்

இடைச்சொல்

  • கு, ஐ, உம், மற்று, தான்

உரிச்சொல்

  • உறு, மாநகரம்

 நிற்க அதற்குத் தக… 

கலைச்சொல் அறிவோம்

  • நட்டுப்பற்று – Patriotism
  • இலக்கியம் – Literature
  • கலைக்கூடம் – Art Gallery
  • மெய்யுணர்வு – Knowledge of Reality

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *