தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி
4. ஆனந்தம் விளையும் பூமியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி – சுகம்
கோடி விளைந்திடக் கும்மியடி
நமது இன்னல் போனதடி – என்று
நெஞ்சம் நெகிழ்ந்தே கும்மியடி
பாவலர் புகழும் பூமியடி- நம்
பாரதம் என்னும் தேசமடி
ஆனந்தம் விளையும் பூமியடி- புகழ்
ஆரம் கொண்ட தேசமடி
அறிவில் சிறந்த தேசமடி-நல்
அறிஞர்கள் வாழும் பூமியடி
மலையாய் உயர்ந்த தேசமடி- பெரும்
வளமும் கொண்ட பூமியடி
இந்தியா நமது தேசமடி- நீ
இணைந்து ஒன்றாய் வாழ்ந்திடவே
மண்ணைத் தாயாய் போற்றிட்டி-உன்
கண்ணைப் போலக் காத்திட்டி
வாங்க பேசலாம்
● நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.
விடை
இந்திய நாட்டின் பெருமைகள் :
● உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு.
● பல்வேறு மக்கள் தொன்றுதொட்டு இன்றுவரை மகிழ்ச்சியுடன் வாழும் வளம் பெற்ற நாடு.
● இயற்கை அரண்களான வடக்கே இமயமலை மூன்று பக்கம் நீராலும் சூழப்பட்ட நாடு.
● பழமையான கலாச்சாரத்தைக் கொண்ட நாடு.
● வேளாண் தொழிலில் சிறந்த நாடு.
● விட்டுக்கொடுத்து வாழும் மிகப்பெரிய பண்பு கொண்ட நாடு.
● காடுகளில் வாழும் கலாச்சாரத்திலும் புதிய நாகரிகம் கண்ட, வன்முறையில்லாத நாடு.
● பல சாதி மத இனம் மொழி வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழும் நாடு.
● விஞ்ஞானிகள் பலரையும் சான்றோர்கள் பலரையும் ஈன்றெடுத்த நாடு வீரம் பொதிந்த நாடு .
இதனாலன்றோ பாரதியார்,
பாருக்குள்ளே நல்ல நாடு
நம் பாரத நாடு. – என்று பாடுகிறார்.
● உங்கள் ஊரிலுள்ள சிறப்புவாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக.
விடை
எங்கள் ஊர் திருவண்ணாமலை. இங்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் முதலிடம் பெறுவது அருணாச்சலேஸ்வரர் கோயில்தான். கார்த்திகை தீபம், கிரிவலம் இவையிரண்டும் திருவண்ணாமலையுடன் பிணைந்தது. இது சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்று இது அக்னி தலமாகும். கார்த்திகை மாதத்தில் இங்குள்ள மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மலையைச் சுற்றிவருவர். அவ்வாறு சுற்றும்போது மூலிகைக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று கூறுவர்.
அடுத்தது சாத்தனூர் அணை. பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இங்கு தொங்குபாலம் ஒன்று உள்ளது. சிறுவர்களுக்கான படகு சவாரியும் இரயில் வண்டியும் உள்ளன. ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், செஞ்சிக்கோட்டை இவையெல்லாம் திருவண்ணாமலைக்குப் பெருமை சேர்ப்பவை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது. செஞ்சிக்கோட்டையும் வரலாற்றுச் சிறப்புடைய கோட்டையாகும். விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலாவாசிகளால் அலங்கரிக்கப்படும்.
சிந்திக்கலாமா!
கண்ணைப்போல காக்கவேண்டும் எவ்வாறு?
விடை
● வனவிலங்குகள், பறவைகள் வாழும் இடங்களில் உள்ள தாவரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
● வனவிலங்குகளை வேட்டையாடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
● அவை உள்ள இடங்களில் பெரிய நீர்த்தொட்டிகள் அமைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்.
● அவ்வப்போது, அவற்றிற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிப் போடலாம். அரசாங்கத்தின் உதவியுடன் வனத்துறையினர் மேலும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘இன்னல்‘ – இச்சொல்லின் பொருள்
அ) மகிழ்ச்சி
ஆ) கன்னல்
இ) துன்பம்
ஈ) இன்பம்
[விடை : இ) துன்பம்]
2. கும்மியடி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கும்மி + யடி
ஆ) கும் + மியடி
இ) கும் + மடி
ஈ) கும்மி + அடி
[விடை : ஈ) கும்மி + அடி]
3. ஆனந்தம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) மகிழ்ச்சி
ஆ) வருத்தம்
இ) அன்பு
ஈ) கோபம்
[விடை : ஆ) வருத்தம்]
4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்
அ) தேசமடி – பூமியடி
ஆ) போற்றிட்டி – காத்திட்டி
இ) கும்மியடி – கோடி
ஈ) போனதடி – போற்றிடவே
[விடை : ஈ) போனதடி – போற்றிடவே]
5. கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்
விடை :
மொழியோடு விளையாடு
படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க,
பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.
பொருத்துக
1. பாரதம், தேசம் – இன்னல்
2. ஆனந்தம், சந்தோஷம் – அன்னை
3. நெஞ்சம், உள்ளம் – மகிழ்ச்சி
4. துன்பம், துயர் – நாடு
5. தாய், அம்மா – மனம்
விடை
1. பாரதம், தேசம் – நாடு
2. ஆனந்தம், சந்தோஷம் – மகிழ்ச்சி
3. நெஞ்சம், உள்ளம் – மனம்
4. துன்பம், துயர் – இன்னல்
5. தாய், அம்மா – அன்னை
அறிந்து கொள்வோம்
நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.
செயல் திட்டம்
உமது ஊரில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு, எழுதி வருக.
விடை
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்.
நீர் இருந்தா ஏர் இருக்கும்!
ஏர் இருந்தா ஊர் இருக்கும்!
ஊர் இருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்!
உண்மையோடு நன்மை எல்லாம் நல்லா செழிக்கும்!