Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 6

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 6

தமிழ் : பருவம் 1 இயல் 6 : துணிந்தவர் வெற்றி கொள்வர்

6. துணிந்தவர் வெற்றி கொள்வர்

மூன்றாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் வகுப்பு ஆசிரியர் ஒரு போட்டியை அறிவித்தார். ஓர் அறையின் நடுவில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையினுள் சென்று பெட்டியினைத் தூக்கி வருபவரே வெற்றியாளர் என்பதே அப்போட்டியாகும்.

அனைத்து மாணவர்களும் ஆவலுடன் பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையினுள் சென்றனர். அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது. அதனைக் கண்டவுடன் மாணவர்கள் பலர் தங்களால் அப்பெட்டியினைத் தூக்க இயலாது எனப் போட்டியிலிருந்து விலகி விட்டனர். மேலும் சிலர் பெட்டிக்கு அருகே சென்று பின்னர் தங்களால் பெட்டியைத் தூக்க இயலவில்லை என்றால் மற்றவர்கள் சிரிப்பார்களே என்று நினைத்துப் போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டனர். கவியரசி என்ற மாணவி மட்டும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எண்ணி, பெட்டியினை நகர்த்திய போது பெட்டி எளிதாக நகர்ந்தது. உடனே, அம்மாணவி பெட்டியினை எளிதாகத் தூக்கினாள்.

கேட்கும் / படிக்கும் கதை, கவிதை / செய்திகள் / ஆகியவற்றைப் புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளால் வளப்படுத்துதல்

பிற மாணவர்கள் அனைவரும் இதனை வியப்புடன் பார்த்தனர். பின்னர் தயக்கம் விலகி அனைவரும் ஓடிச்சென்று தாங்களும் பெட்டியினை தூக்கிப் பார்த்தனர். பெட்டி தூக்குவதற்குச் சுலபமாக இருந்தது. மாணவ, மாணவிகள் ஆசிரியரிடம் சென்று பெட்டி பெரியதாக இருந்ததால் நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றனர். அதற்கு ஆசிரியர் அது காகிதத்தால் செய்த பெட்டி என்று மாணவர்களிடம் விளக்கினார். மேலும் ஒரு செயலில் இறங்குவதற்குமுன் சிந்திக்க வேண்டும், ஆனால் முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

நீங்கள் எல்லாரும் தயக்கம் காட்டியதால் வெற்றி பெறவில்லை. தன்னால் முடியும் என்று நம்பி கவியரசி முயன்றதால் வெற்றி பெற்றாள். எனவே அன்புக் குழந்தைகளே,

“தோல்வியின் அடையாளம் தயக்கம் 

வெற்றியின் அடையாளம் முயற்சி 

துணிந்தவர் தோற்பதில்லை 

தயங்கியவர் வென்றதில்லை”

நாம் விதைக்கும் விதைகளில் முயற்சியுடன் மண்ணைப் பிளந்து கொண்டு வருபவையே செடிகளாகின்றன. தயங்கி நிற்பவை தங்கி விடுகின்றன. அதுபோல கவியரசி தயங்காமல் துணிச்சலாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றாள் எனக் ஆசிரியை கூறினார். கவியரசிக்குப் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கினார். கவியரசியும் மகிழ்ச்சியடைந்தாள்.

“முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.”

மொழியோடு விளையாடு

அம்புக்குறியுடன் கூடிய சுழல் அட்டையில் மொழிமுதல் எழுத்துகளை எழுதிக் கொள்ள வேண்டும். மாணவர்களை வட்ட வடிவில் அமர வைத்து இந்த அட்டையினைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அம்புக்குறியினை வேகமாகச் சுற்றி விடுவர். அம்புக்குறி எந்த எழுத்தில் நிற்கிறதோ, அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு சொல்லை அந்த மாணவர் கூறவேண்டும். இவ்வாறே அனைத்து மாணவரையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும். பயன்படுத்திய பின்பு எழுத்துகளை மாற்றி மீண்டும் பயன்படுத்தவேண்டும்.

கலையும் கைவண்ணமும்

பயன்படுத்திய மற்றும் உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் செய்து மகிழ்க.

எ.கா: உதிர்ந்த இலைகளைக் கொண்டு உருவம் அமைத்தல்.

பயிற்சி

வாங்க பேசலாம்

1. போட்டி நடந்த இந்த வகுப்பறையில் நீ இருந்ததிருந்தால் என்ன செய்திருப்பாய்?

முயற்சி செய்திருப்பேன்.

2. பளு தூக்குதல் போன்ற கடினமான வேலைகளை ஆண் பெண்  இருவராலும் செய்ய முடியுமா? உனது கருத்து என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக.

ராஜசேகர் : பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ஆண்கள்  தான்  சாதிக்க  முடியும். 

சசிரேகா : ஏன் எங்களால் முடியாது? கர்ணம் மல்லேஸ்வரி, மீராபாய் சானு, போன்றோர் உலக போட்டிகளில் தங்கம் வென்று சாதித்துள்ளனரே! 

கார்த்திகா : சுரேகா யாதவ் புனே முதல் மும்பை வரை ரயிலை ஓட்டினார்; சுசேதா கடேதங்கர் கோபி பாலைவனத்தைக் கடந்தார். அவனி சதுர்வேதி என்ற பெண்மணி முதல் இந்திய போர் விமானியானார்.  உஜ்வாலா  பாட்டில் என்ற பெண்மணி  இந்தியாவில் முதன் முதலில் கப்பலோட்டிய மாலுமி. 

விமலா : விண்வெளிக்கே  இந்தியப் பெண்ணான கல்பனா சாவ்லா சென்றாரே

நந்தகோபால் : இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக அத்தனை  வேலைகளையும் பெண்களும் செய்ய முடியும்.

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) வகுப்பு + அரை                                              

ஆ) வகுப்பு + அறை

இ) வகு + அறை                                                     

ஈ) வகுப் + அறை

விடை : ஆ) வகுப்பு + அறை

2. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ________.

அ) மகிழ்ச்சி                        

ஆ) மதிப்பு     

இ) அவமதிப்பு

ஈ) உயர்வு

விடை : இ) அவமதிப்பு

3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் __________.

அ) சிறிய                                                            

ஆ) நிறைய           

இ) அதிகம்                                                        

ஈ) எளிய

விடை : அ) சிறிய

4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________.

அ) சாதனை                                                      

ஆ) மகிழ்ச்சி

இ) நன்மை                       

ஈ) தோல்வி

விடை : ஈ) தோல்வி

5. மண்ணைப்பிளந்து  என்ற  சொல்லைப்  பிரித்து எழுதக்  கிடைப்பது _______.

அ) மண் + பிளந்து                         

ஆ) மண்ணைப் + பிளந்து

இ) மண்ணை + பிளந்து                                                      

ஈ) மன் + பிளந்து

விடை : ஆ) மண்ணைப் + பிளந்து

வினாக்களுக்கு விடையளி

1. மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன?

பெட்டியைத் தூக்கி வரும் போட்டியே ஆசிரியர் அறிவித்தது. 

2. மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?

பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்ததால் போட்டியில் மாணவர் பலர் பங்கேற்கவில்லை. 

3. கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

 கவியரசியின் வெற்றிக்குக் காரணம் முயற்சியாகும்.

பாடப்பொருளை வரிசைப்படுத்துவோமா?

1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர். 

2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினார். 

3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள். 

4. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார். 

5. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

விடை :

1. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார். 

2. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

3. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர். 

4. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள். 

5. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினார். 

பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?

எ.கா:

1. ஆசிரியர் 

2. அதிசயம்

3. போட்டி

4. பெட்டி

5. பெயர் 

6. சரி 

7. பெரிய                                   

8. ஆதி

9. சிரி

10. அடி

பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?

இணைந்து செய்வோம்

மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுக.

மொழியோடு விளையாடு

அம்புக்குறியுடன் கூடிய சுழல் அட்டையில் மொழி முதல் எழுத்துகளை எழுதிக் கொள்ள வேண்டும்.  மாணவர்களை வட்ட வடிவில் அமர  வைத்து  இந்த அட்டையினைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும்  அம்புக்குறியினை  வேகமாகச் சுற்றி விடுவர். அம்புக்குறி எந்த எழுத்தில் நிற்கிறதோ, அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு சொல்லை அந்த  மாணவர்  கூறவேண்டும். இவ்வாறே அனைத்து  மாணவரையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும். பயன்படுத்திய பின்பு எழுத்துகளை மாற்றி  மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

ம – மஞ்சள், மட்டை, மருந்து, மணல்,

ந – நட்பு, நண்பன், நன்மை 

இ – இமயம், இன்பம், இனிமை, இட்லி.

உ – உண்மை, உழைப்பு, உறுதி, உலகம் 

அ – அம்மா, அன்பு, அமைதி, அழகு 

எ – எறும்பு, எண்ணிக்கை, எட்டு, எலி 

த – தம்பி, தட்டு, தயிர், தக்காளி 

க – கம்பி, கட்டிடம், கதவு, கட்டில் 

ப – படம், பட்டம், பம்பரம், பம்பாய் 

ஆ – ஆசிரியர், ஆலயம், ஆகாயம், ஆனந்தம்

கலையும் கைவண்ணமும்

பயன்படுத்திய மற்றும் உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் செய்து மகிழ்க.

செயல் திட்டம்

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித்  தொகுத்து  வருக.

பழமொழிகள் / பொன்மொழிகள்

1. முடியும் என்றால் முயற்சி செய்; முடியாது என்றால் பயிற்சி செய்.

2. நேரத்தை, வீணாக்கும்போது 

  கடிகாரத்தைப் பார்

  ஓடுவது முள் அல்ல

  உன் வாழ்க்கை. 

3. முயற்சி இல்லாத இடத்தில் எதுவும் விளங்காது.

4. நல்ல காரியங்கள் தாமாக வந்து சேர்வதில்லை.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

5. எதுவும் தாமாக வருவதில்லை, எல்லாவற்றையும் தேடியே ஆக வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *