தமிழ் : இயல் 7 : விதைநெல்
கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி
I. பலவுள் தெரிக
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –
- மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
- மிகுந்த செல்வம் உடையவர்
- பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
- நெறியோடு நின்று காவல் காப்பவர்
விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர்
II. குறு வினா
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் ஆகும். |
III. குறு வினா
பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடை ய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை ; ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து
பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டு தான் மெய்க்கீர்த்தி காணப்பபடுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை. இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.
IV. நெடு வினா
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்கு
இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
குறிப்புச்சட்டம்
முன்னுரை
சோழ நாட்டின் வளம்
மன்னனின் சிறப்பும் பெருமையும்
முடிவுரை
முன்னுரை:-
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழ நாட்டின் வளத்தையும், மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.
சோழ நாட்டின் வளம்:-
நாட்டு வளம் | மக்கள் வளம் |
யானைகள் மட்டும் பிணிக்கப்படுகின்றன. | மக்கள் பிணிக்கப்படுவதில்லை |
சிலம்புகள் மட்டும் புலம்பும் | மக்கள புலம்புவதில்லை |
ஓடைகள் மட்டும் கலக்கமடையும். | மக்கள் கலக்கம் அடைவதில்லை |
மாங்காய் மட்டும் வடுப்படும் | மக்கள் வடுப்படுவதில்லை |
மலர்கள் மட்டும் பறிக்கப்படுகின்றன | மக்கள் உரிமை பறிக்கப்படுவதில்லை |
காடுகள் மட்டும் (கொடியவனாய்) கொடி உடையதாய் இருக்கும். | மக்கள் கொடியவராய் இல்லை |
வண்டுகள் மட்டும் கள்(தேன்) உண்டு மயங்கும் | மக்கள் கள் உண்பதில்லை |
மலை மூங்கில் மட்டுமே வெறுமையாய் இருக்கும் | மக்களிடையே வறுமை இல்லை |
வயிலில் நெற்கதிர்ககள் மட்டும் பேராக எழுகின்றன | சாேழநாட்டில் போர் இல்லை |
நீண்ட மலைகளை இருள் சூழ்ந்திருக்கின்றன | நாட்டில் வறுமை இருள் இல்லை |
மான்களின் கண்கள் மருள்கின்றன | மக்கள் கண்களில் மருட்சியில்லை |
குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன | மக்கள் நிலை பிறழ்வதில்லை |
செவிலியரே சினங்கொள்வார் | வேறு யாரும் சினம் கொள்வதில்லை |
புலவர் பாட்டில் பொருள் மறைந்து இருக்கிறது | சோழ நாட்டில் யாரும் பொருளை மறைப்பதில்லை |
இசைப்பாணேர தெருவில் கூடி ஆடிப் பாடுவர் | மக்கள் தெருவில் ஆடுவதில்லை |
மன்னனின் சிறப்பும் பெருமையும்:-
மன்னன் மக்களுக்கு காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக. மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.
முடிவுரை:-
சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப் பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் சங்க இலக்கிப் பாடல்கள் ____________ ஆகும்
விடை : பதிற்றுப்பத்து
2. சோழ நாட்டில் பிறந்தொழுகுவது ____________
விடை : கயற்குலம்
3. இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்தியின் வரிகள் ____________
விடை : 91
4. அழியாத கல் இலக்கியம் எனப் போற்றபடுவது ____________
விடை : மெய்க்கீர்த்தி
5. திரிபாலர் ____________ ஆவார்
விடை : எண்மர்
6. அரசர்கள் தங்கள் ____________, ____________ காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்
விடை : வரலாறும், பெருமையும்
II. சிறு வினா
1. இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?
- கோப்பரகேசரி
- திருபுவனச் சக்கரவர்த்தி
2. திசாபாலர் எண்மர் யாவர்
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்
3. அரசர்கள் தங்கள் வரலாற்றையும் பெருமையும் கல்லில் எதற்காக செதுக்கினார்கள்?
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.
4. மெய்க்கீர்த்தி என பெயர்வரக் காரணம் யாது?
சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது;
5. மெய்க்கீர்த்தி எப்படி அமைந்துள்ளது?
செப்பமான வடிவம் பெற்றது; கல்இலக்கியமாய் அமைந்தது.
மெய்க்கீர்த்தி – பாடல் வரிகள்
இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய படியானையே பிணிப்புண்பன வடிமணிச்சிலம்பே யரற்றுவன செல்லோடையே கலக்குண்பனவருபுனலே சிறைப்படுவன மாவே வடுப்படுவன மாமலரே கடியவாயின காவுகளே கொடியவாயின கள்ளுண்பன வண்டுகளே பொய்யுடையன வரைவேயே போர்மலைவன எழுகழனியே மையுடையன நெடுவரையே மருளுடையன இளமான்களே கயற்குலமே பிறழ்ந்தொ ழுகும் கைத்தாயரே கடிந்தொறுப்பார் இயற்புலவரே பொருள்வைப்பார் இசைப் பாணரே கூடஞ்செய்வார்என்று கூறி இவன்கா க்கும் திருநாட்டி னியல்இதுவென நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும் விழிபெற்ற பயனென்ன வும் மெய்பெற்ற அருளென்னவும் மொழிபெற்ற பொருளென்ன வும் முகம்பெற்ற பனுவலென்ன வும் எத்துறைக்கும் இறைவனென்ன வும் யாஞ்செய்…. |