அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
அ) பிரையோபில்லம்
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) பாக்டீரியா
விடை : அ) பிரையோபில்லம்
2. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ) ஸ்போர்கள்
ஆ) துண்டாதல்
இ) மகரந்தச் சேர்க்கை
ஈ) மொட்டு விடுதல்
விடை : ஈ) மொட்டு விடுதல்
3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) மலர்
விடை : ஈ) மலர்
4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
அ) காற்று
ஆ) நீர்
இ) பூச்சிகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை : ஈ) மேற்கூறிய அனைத்தும்
5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
அ) வெற்றிலை
ஆ) மிளகு
இ) இவை இரண்டும்
ஈ) இவை இரண்டும் அன்று
விடை : இ) இவை இரண்டும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு __________
விடை : மகரந்தத்தாள்
2. __________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
விடை : சூற்பை
3. கருவுறுதலுக்குப் பின் சூல் __________ ஆக மாறுகிறது.
விடை : விதை
4. சுவாச வேர்கள் __________ தாவரத்தில் காணப்படுகின்றன.
விடை : அவிசினியா
5. வெங்காயம் மற்றும் பூண்டு __________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை : தரைகீழ்த்தண்டு குமிழம்
II. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.
விடை : சரி
2. அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்
விடை : தவறு – மகரந்தத்தூள் சூலக முடியை அடைவது மகரந்தச் சேர்க்கை
3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்
விடை : சரி
4. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்
விடை : தவறு – இஞ்சி – தரைகீழ் தண்டு
5. சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
விடை : சரி
IV. பொருத்துக
1. அல்லி – அ. சப்பாத்திக்கள்ளி
2. பெரணி – ஆ. கிரைசாந்திமம்
3. இலைத் தொழில் தண்டு – இ. பூச்சிகளை ஈர்க்கிறது
4. கொக்கி – ஈ. ஸ்போர்
5. தரைகீழ் ஓடு தண்டு – உ. பிக்னோனியா
விடைகள் :
1. அல்லி – இ. பூச்சிகளை ஈர்க்கிறது
2. பெரணி – ஈ. ஸ்போர்
3. இலைத் தொழில் தண்டு – அ. சப்பாத்திக்கள்ளி
4. கொக்கி – உ. பிக்னோனியா
5. தரைகீழ் ஓடு தண்டு – ஆ. கிரைசாந்திமம்
V. மிகச் சுருக்கமாக விடையளி
1. தாவரத்தில் காணப்படும் இரு வகையான இனப் பெருக்க முறைகளை எழுது.
a) பாலினப் பெருக்கம்
b) பாலில்லா இனப்பெருக்கம்
2. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
1) மகரந்தத்தாள்
2) சூலகத்தாள்
3. மகரந்தச்சேர்க்கை – வரையறு.
ஒரு மலரில், மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
4. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
• காற்று
• பூச்சிகள்
• பறவைகள்
• நீர்
5. கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்க்கு எடுத்துக்காட்டு தருக.
கந்தம் – சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
கிழங்கு – உருளைக்கிழங்கு
6. பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?
• ஏறுகொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன.
• இவை ஏறுகொடிகளைத் தாங்கிகளில் பற்றி ஏற உதவுகின்றன.
எ.கா. பைசம் சட்டைவம்- நுனிச்சிற்றிலை பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.
7. முட்கள் என்றால் என்ன?
• இலைகள் முட்களாக மாறியதால் தண்டு பசுமையாகி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது.
எ.கா. கள்ளி
VI. சுருக்கமாக விடையளி
1. இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து.
![](https://www.brainkart.in/media/tamimg44/fby8U7P.png)
இருபால் மலர்
1. முழுமையான மலர் பொதுவாக இருபால் மலர் ஆகும்
2. இருபால் மலரில் மகரந்த தாள் வட்டம், சூலக வட்டம் ஆகிய இரண்டும் இருக்கும்
ஒருபால் மலர்
1. முழுமையற்ற மலர் பொதுவாக ஒருபால் மலராக இருக்கும்.
2. ஒருபால் மலரில் மகரந்த தாள் வட்டம், அல்லது சூலக வட்டம் இருக்கும்.
2. அயல் மகரந்தச் சேரக்கை என்றால் என்ன?
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
3. இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
அகேஷியா ஆரி குலி பார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று, இலைபோல் மாறி இலை செய்யவேண்டிய ஒளிச்சேர்க்கை வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது.
VII. விரிவாக விடையளி
1. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
![](https://www.brainkart.in/media/tamimg44/urpdvj0.png)
![](https://www.brainkart.in/media/tamimg44/VhWVeGa.png)
மலரில் மகரந்ததூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
செயற்கை மகரந்தச் சேர்க்கை : நாம் ஆண்மலரில் உள்ள மகரந்தத் தூளை பெண்மலரில் உள்ள சூலக முடியில் சேர்த்தால் அது செயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
இயற்கை மகரந்தச் சேர்க்கை : இயற்கையாகவே பல்வேறு வழிமுறைகளில் (நீர், காற்று, தேனி, பூச்சிகள், பறவைகள் மூலம்) மலரின் சூலக முடியை மகரந்தத்தாள் சென்றடைவது இயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
• புற்கள், லேசான மகரந்தத்தூளை உருவாக்கும்.
• மகரந்தப்பை, மகரந்தத்தூளை உதிர்க்கும் போது காற்று அதை எடுத்துச் சென்று அருகில் உள்ள மலரில் சேர்க்கும்.
• பூச்சிகள் மற்றும் பறவைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.
• தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும்.
• இவை ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்குச் செல்லும் போது அதன் கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக் கொள்ளும் இதன் மூலம் நடக்கும் மகரந்தச்சேர்க்கை அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
• இதே போல் காற்று மலரை அசைக்கும் போது மகரந்தத்தூள் உதிர்ந்து அதே மலரின் சூலக முடியை அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும். இது பெரும்பாலும் இருபால் மலரில் நடக்கிறது.
2. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக.
• பொதுவாகத் தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழ் வளர்ந்து உணவைச் சேமிக்கிறது.
• இத்தகைய தரைகீழ்த் தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும்.
தரைகீழ்த் தண்டு நான்கு வகைப்படும்
1) மட்ட நிலத்தண்டு
2) கந்தம்
3) கிழங்கு
4) குமிழம்
மட்ட நிலத்தண்டு :
• தண்டு தரைக்குக் கீழ் இருக்கும்.
• இது கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்து காணப்படும்.
• கணுவில் செதில் இலைகள் தோன்றும்
• இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும் குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
• இதன் தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும்.
எ.டு. இஞ்சி, மஞ்சள்
![](https://www.brainkart.in/media/tamimg44/7Wjdo2F.png)
கந்தம் :
• இத்தரைக்கீழ் தண்டு வட்ட வடிவில் இருக்கும்
• மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
• இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் உருவாகும்.
• ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்கும்.
எ.டு. சேனை, சேப்பங்கிழங்கு
![](https://www.brainkart.in/media/tamimg44/TaBFLBg.png)
கிழங்கு :
• இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும்.
• இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும் (கண்கள்)
• இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்து புதிய தாவரத்தைத் தரும்
எ.டு. உருளைக்கிழங்கு.
![](https://www.brainkart.in/media/tamimg44/d0ObPNI.png)
குமிழம் :
• இதன் தண்டு மிகவும் குறுகியது. தட்டு போன்றது.
• இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
• இதில் இரண்டு வகை இலைகள் உள்ளன.
i. சதைப்பற்றுள்ள இலை
ii. செதில் இலை
• குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கும்.
எ.கா. பூண்டு, வெங்காயம்
![](https://www.brainkart.in/media/tamimg44/GzbwhwT.png)
VIII. உயர் சிந்தனை வினாக்கள்
1. இஞ்சி என்பது தண்டு. அது வேர் அல்ல ஏன்?
• ஆம் இஞ்சி என்பது தண்டின் மாற்றுருவாகும்.
• இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
• இந்த தரைகீழ்தண்டு உணவைச் சேமிக்கும்.
• இது கணு மற்றும் கணுவிடைகளோடு இருக்கும்.
2. ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன நடைபெறும்? அதில் மகரந்தத் தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?
• ரோஜா மலரின் மகரந்த்தூள் லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் அது வளர்ச்சி அடையாது.
• மேலும் லில்லி மலரின் சூலக முடியானது அதன் இனத்தின் மகரந்தத் தாளினை மட்டும் இனங்கண்டு மகரந்தச் சேர்க்கை நடந்து கருவுறுதல் நிகழும். ரோஜா மலரின் மகரந்தத்தை ஏற்றுக் கொள்ளாது.
IX. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி
1. கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியானவிளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியானவிளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை : இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு
X. படம் சார்ந்த கேள்விகள்
1. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களைக் குறிக்கவும்.
![](https://www.brainkart.in/media/tamimg44/YyEEL16.png)
சூலகமுடி சூலகம் மகரந்தக்கம்பி சூல் புல்லி மகரந்தத்தாள் அல்லி சூலகத்தண்டு மகரந்தத்தாள் சூற்பை
![](https://www.brainkart.in/media/tamimg44/mu1XypK.png)
2. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தாவரங்களை அடையாளம் காண்க.
பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.
தாவரங்களின் பெயர் மாற்றுருக்கன்
ஆலமரம் தூண்வேர்கள்
நெப்பன்தஸ் கொல்லிகள்
வெங்காயத் தாமரை குட்டையான ஓடு தண்டு
ஸ்டோலன் தரையொட்டிய தண்டின் மாற்றுரு
மாணவர் செயல்பாடு
செயல்பாடு 1
நோக்கம்
தர்ப்பூசணி மற்றும் உருளைக் கிழங்கிலிருந்து புதிய தலைமுறைத் தாவரங்களை உருவாக்குதல்.
தேவையானவை
மண்ணால் நிரப்பப்பட்ட இரண்டு தொட்டிகள், உருளைக் கிழங்கு, தர்ப்பூசணி விதைகள் மற்றும் தண்ணீர்.
செய்முறை
இரண்டு தொட்டிகளை எடுத்துக்கொண்டு அவற்றை இயற்கை உரம் கலந்த மண்ணால் நிரப்பவும். காய்ந்து போகாத தோல் உடைய புதிய உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக்கொண்டு, ஒரு தொட்டியில் அதைப் புதைத்துவைக்கவும். மறு தொட்டியில் தர்ப்பூசணி விதைகளை விதைக்கவும். இரண்டு தொட்டிகளுக்கும் தினமும் தண்ணீர் ஊற்றி, அவற்றைப் பராமரிக்கவும்.
காண்பன
சில நாட்கள் கழித்து, ஒரு தொட்டியில் உருளைக்கிழங்கு முளைத்திருப்பதை நாம் காணலாம். மறு தொட்டியில் விதைக்கப்பட்ட தர்ப்பூசணி விதைகள் முளைத்துச் செடிகளைத் தந்திருக்கும். ஒவ்வொரு விதையும் ஒரு செடியை உருவாக்குகிறது.
செயல்பாடு 2
பின்வரும் தாவரங்கள் எதிலிருந்து உருவாகின்றன என்பதைக் கண்டுபிடி.
![](https://www.brainkart.in/media/tamimg44/7xbZ3nH.png)
![](https://www.brainkart.in/media/tamimg44/hDHhlvw.png)
செயல்பாடு 3
ஒரு மலரை எடுத்துக்கொள். அதை படத்தில் உள்ளவாறு நீள்வெட்டுத் தோற்றத்தில் வெட்டி அதன் பாகங்களைப் பிரித்துப் பார். உன்னால் ஆண் இனப்பெருக்க உறுப்பான மகரந்தத்தாள் வட்டத்தைக் (மகரந்தப்பை மற்றும் மகரந்தக் கம்பி) கண்டுபிடிக்க முடிகிறதா? கவனமுடன் பெண் இனப்பெருக்க உறுப்பான சூலக வட்டத்தைக் (சூற்பை, சூலகத்தண்டு, சூலக முடி) கவனி. உன்னால் இவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றால் மென்மையாக, புல்லிகள் மற்றும் அல்லிகளை நீக்கிவிட்டுப் பார்க்கவும் உனது குறிப்பேட்டில் மலரின் பாகங்களை வரைந்து அவற்றை வரிசைப்படுத்தவும்.
![](https://www.brainkart.in/media/tamimg44/WpEzxP9.png)
செயல்பாடு 4
மலர் ஆல்பம் ஒன்றைத் தயார் செய்க
ஒருசில மலர்களைச் சேகரித்து, அவற்றை செய்தித்தாள் அல்லது புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையில் வைக்கவும். அவற்றின் மேல் இரண்டு கடினமான தாளை வைத்து அதன்மீது செங்கல் போன்ற கனமான பொருளை வைத்து அழுத்தவும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாள்களை மாற்றவும். மலர்கள் காயும் வரை இதைத் தொடர்ந்து செய்யவும். பின் அவற்றை ஒரு தாளில் ஒட்டவும். இதுவே மலர் ஆல்பமாகும்.
செயல்பாடு 5
![](https://www.brainkart.in/media/tamimg44/LhgWq3J.png)
![](https://www.brainkart.in/media/tamimg44/hQAeUPF.png)
செயல்பாடு 6
![](https://www.brainkart.in/media/tamimg44/IHqdBKN.png)
பூசணித் தாவரம் மொட்டுகளை உருவாக்கும்போதே அதில் பத்துப் பெண் மலர் மொட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றை நெகிழிப் பையால் கட்டு. இதனால் இம்மலருக்குள் வேறு எந்தப் பொருளும் நுழைய முடியாது. காற்று நுழைவதற்காக, குண்டூசி கொண்டு நெகிழிப்பையில் சிறுசிறு துளைகளை உருவாக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை காத்திரு. பிறகு மொட்டுகள் விரிந்து மலராக மாறும்.
பிறகு மூன்று அல்லது நான்கு ஆண் மலர்களைத் தேர்ந்தெடுத்து அதன் மகரந்தத்தாளை எடுத்து, அதை நன்கு குலுக்கி, அதில் உள்ள மகரந்தத்தூள்களைச் சேகரித்து வைத்துக் கொள். பிறகு நெகிழிப் பைகளால் கட்டப்பட்ட பத்துப் பெண் மலர்களில், ஐந்து பெண் மலர்களின் பையைத் திறந்து, சிறிய தூரிகை மூலம் சேகரிக்கப்பட்ட மகரந்தத்தூள்களைக் கவனத்துடன் பெண்மலரின் சூலகமுடி சேதமடையாமல், அதில் தூவி அம்மலர்களை மீண்டும் நெகிழிப் பையால் கட்டிவைக்கவும்.
செயல்பாடு 7
நோக்கம்
வேரின் மாற்றுருக்களைப் பற்றி படித்தல்.
தேவையானவை
முள்ளங்கி, கேரட், பீட்ரூட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆலமர விழுதுகள், பற்றுவேர்கள், மற்றும் சுவாசவேர்கள் (இப்பொருள்கள் கிடைக்கவில்லையெனில் அதற்குப் பதிலாக வரைபடத்தைப் பயன்படுத்தலாம்)
செயல்முறை
ஒவ்வொரு வேரின் புற அமைப்பையும் கவனித்துப் பார்.
காண்பன
ஒவ்வொரு வேரும், பிற வேர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை அறிந்து அவற்றின் படம் வரைக.
செயல்பாடு 8
நோக்கம் : தண்டின் மாற்றுருக்களைப் பற்றி படித்தல்.
தேவையானவை: இஞ்சி, உருளைக் கிழங்கு, வெங்காயம், புதினா, காகிதப்பூ செடி, அகேஷியா, சப்பாத்திக் கள்ளி மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்கும் தண்டுகள்.
செயல்முறை: ஒவ்வொரு தண்டின் புற அமைப்பையும் நன்றாக உற்று நோக்குக.
காண்பன: இவற்றின் படத்தை வரைந்து, இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் மற்றும் அவற்றின் மாற்றுருக்களின் பணிகளையும் எழுதுக.