Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Polymer Chemistry

Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Polymer Chemistry

அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : பலபடி வேதியியல்

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை __________ ஆகும். 

அ) நைலான் 

ஆ) பாலியஸ்டர் 

இ) ரேயான் 

ஈ) பஞ்சு

விடை : அ) நைலான் 

2. வலுவான இழை __________ ஆகும். 

அ) ரேயான் 

ஆ) நைலான் 

இ) அக்ரிலிக் 

ஈ) பாலியஸ்டர்

விடை : ஆ) நைலான் 

3. ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை __________ 

அ) உருகும்

ஆ) எரிதல் 

இ) ஒன்றும் ஏற்படுவதில்லை

ஈ) வெடித்தல் 

விடை : ஆ) எரிதல் 

4. கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை __________ ஆகும். 

அ) நைலான் 

ஆ) பாலியெஸ்டர் 

இ) அக்ரிலிக்

ஈ) PVC

விடை : இ) அக்ரிலிக் 

5. நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது __________ என்ற பயன்பாட்டில் அறியலாம். 

அ) இரத்தப்பைகள்

ஆ) நெகிழிக் கருவிகள் 

இ) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்

ஈ) நெகிழி கேரி பைகள்

விடை : அ) இரத்தப்பைகள் 

6. __________ என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள் 

அ) காகிதம்

ஆ) நெகிழி புட்டி 

இ) பருத்தி துணி

ஈ) கம்பளி

விடை : ஆ) நெகிழி புட்டி 

7. PET என்பது __________ இன் சுருக்கெழுத்தாகும். 

அ) பாலியெஸ்டர்

ஆ) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின் 

இ) பாலிஎத்திலின்டெரிப்தாலேட்

ஈ) பாலித்தின்டெரிலின்

விடை : இ) பாலிஎத்திலின்டெரிப்தாலேட் 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. __________ என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

விடை: PET 

2. பல்வகை நெகிழிகளை இனம்காண __________ பயன்படுகின்றன. 

விடை: ரெசின் குறியீடு

3. சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் __________ ஆகும். 

விடை: பலபடி

4. முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு __________ ஆகும். 

விடை: பருத்தி

5. கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை __________ என்று பெயர்.

விடை: பட்டு

III. சரியா தவறா

1. அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன

விடை : சரி

2. மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும். 

விடை : சரி

3. செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே. 

விடை : தவறு

சரியான விடை : இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்தது. 

4. வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும் 

விடை : சரி

5. பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்

விடை : சரி

IV. பொருத்துக.

1. நைலான்  – அ. வெப்பத்தால் இளகும் நெகிழி 

2. PVC – ஆ. வெப்பத்தால் இறுகும் நெகிழி

3. போக்லைட் – இ. இழை

4. டெப்லான் – ஈ. மரக்கூழ் 

5. ரேயான் – ஒட்டாத சமையல்கலன்கள் 

விடைகள் :

1. நைலான்  – இ. இழை 

2. PVC – அ. வெப்பத்தால் இளகும் நெகிழி 

3. போக்லைட் – ஆ. வெப்பத்தால் இறுகும் நெகிழி

4. டெப்லான் – ஒட்டாத சமையல்கலன்கள் 

5. ரேயான் – ஈ. மரக்கூழ்

V. சரியான வரிசையில் எழுதுக 

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும். 

2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும். 

3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.

4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும். 

5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம். 

6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.

விடைகள் : 

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.

2. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும். 

3. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்து விடலாம்.

4. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும். 

5. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும். 

6. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் குளிர வைக்கவும்.

VI. ஒப்புமை தருக.  

1. பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : __________

விடை : செயற்கை 

2. PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : __________

விடை : மட்காத் தன்மை 

3. நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : __________

விடை : எரியும்

VII. வாக்கியம் மற்றும் காரணம் 

1. வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன. 

காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை 

விடை : வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம். 

2. வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது. 

காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது. 

விடை : வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி. (R) ஆனது (A) யின் சரியான விளக்கம். 

3. வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. 

காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. 

விடை : வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

VIII. குறுக்கெழுத்து 

இடமிருந்து வலம் 

1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை 

2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி 

கீழிருந்து மேல் 

3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு 

4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள் 

மேலிருந்து கீழ் 

5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.

6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை 

7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி 

விடைகள் : 

1. அக்ரிலிக் 

2. பாலி எத்திலின் டெரிப்தாலேட் (PET) 

3. பாலிமர் 

4. ரேயான் 

5. பட்டு

6. அக்ரிலிக் 

7. நைலான்

IX. மிகக் குறுகிய விடை தருக. 

1. பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?

செல்லுலோஸ் 

2. நெகிழிபொருள்கள் வெவ்வேறு பண்புகளையும் குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன

• குறைந்த எடை 

• அதிக வலிமை 

• சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை 

• இளகும் தன்மை 

• நீரினை உட்புகவிடாத தன்மை

• புற ஊதாக் கதிர்களை உட்புக விடாத தன்மை 

3. நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்? 

• நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பதால் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களும் வேதிப் பொருட்களும் உருவாகின்றன. 

• இவை புற்றுநோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உருவாக்கும். 

4. நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது ஏன்? 

• இரும்பு வாளி காற்றுடன் வினைபுரிவதால் துருப்பிடிக்கிறது. 

• ஆனால் நெகிழியினால் செய்த வாளியானது காற்றுடன் வினைபுரிவதில்லை, எனவே அது துருப்பிடிப்பதில்லை. 

5. நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்? 

• ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய நெகிழிகள் நமது சுற்றுப்புறத்திற்கும் விலங்குகளுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தீவிர தாக்கங்களையே ஏற்படுத்த வருகின்றன.

• நெகிழி சிதைவடைவதும் இல்லை, மண்ணில் மட்குவதும் இல்லை. 

• நெகிழி குப்பைகள் பல காலம் மறையாமல் இருப்பதால், எல்லா இடங்களிலும் நிறைந்து குவிந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. 

• விலங்குகள் நெகிழிப்பைகளில் உள்ள உணவுடன் சேர்த்து நெகிழிப் பைகளையும் தவறுதலாக உண்பதால் அவற்றிற்கு கேடு விளைகிறது. 

• கடல் நீரில் குவியும் நெகிழிகள் சிறிய துண்டுகளாக மைக்ரோ நெகிழிகளாக உடைந்து கடலை மாசுபடுத்துகின்றன. 

• எனவே நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது சிறந்த முறையாகும்.

6. வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

• பேக்கலைட் 

• மெலமின் 

7. 5R கொள்கை என்பது என்ன? 

• 5R கொள்கை என்பது

• Refuse (தவிர்) 

• Reduce (குறை)

• Reuse (மீண்டும் பயன்படுத்து) 

• Recycle (மறுசுழற்சி செய்)

• Recover (மீட்டெடு)

X. சிறுவினா 

1. ”மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?

இயற்கை செயல்முறைகளாலும், பாக்டீரியாக்களினாலும் சிதைவடையும் பொருள்கள் மட்கும் தன்மை வாய்ந்தவை எனப்படும். 

2. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்? 

• கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது இயற்கை இழைகளாலான ஆடைவகைகளை அணிய வேண்டும். 

• ஏனெனில் இயற்கை இழைகள் அதிக அளவு நீரை உறிஞ்சுகின்றன. 

• அதிக அளவு காற்றோட்டம் உள்ளதால் உடலை குளிர்ச்சியாகவும், சிரமமின்றியும் வைத்துக்கொள்ள இயற்கை இழைகள் உதவுகின்றன. 

3. விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன? 

• நெகிழிப் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணும்போது விலங்குகள் தவறுதலாக நெகிழிபைகளையும் சேர்த்தே உண்கின்றன. இது விலங்குகளுக்கு கேடு விளைவிக்கின்றன. 

• ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைகள் சுற்றுப்புறத்தை குப்பை கூடமாக்கி, வடிகால்களை அடைத்து மாசுபடுத்துகின்றன. 

• வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால் நீர் தேங்கி நிற்கின்றது. 

• இது கொசுக்களின் இனப் பெருக்கத்திற்கு காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற வியாதிகளை பரப்பி, வெள்ளம் ஏற்படவும் காரணமாகிறது.

XI. நெடுவினா 

1. செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.

செயற்கை இழைகளின் சிறப்புகள் : 

• நிறம் மங்குவது இல்லை.

• சுருங்குவது இல்லை. 

• அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன. 

• அதிக வலிமை உடையது.

• அதிக நீட்சித்தன்மை கொண்டது. 

செயற்கை இழைகளின் குறைபாடுகள் : 

• வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை. 

• எளிதில் தீப்பற்றக் கூடியவை. 

• குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன. 

• போதுமான காற்றோட்டத்தைத் தருவதில்லை. எனவே இவற்றை அணியும்போது வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம். 

• நுண்ணிய துகள்களாய் உதிர்ந்து நீர்நிலைகள், நிலத்தை மாசுபடுத்துகின்றன.

2. நெகிழிப் பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.

• நெகிழிப் பொருள்களை அகற்றும் போது மட்கும் தன்மை கொண்டவை, மட்கும் தன்மையற்றவை என பிரித்த பிறகு அப்புறப்படுத்துவது சிறந்தது. 

• நெகிழிக் குப்பைகளை அகற்ற 5R – கொள்கையை முயற்சிக்க வேண்டும். 

• Refuse (தவிர்த்தல்) 

கடைகளுக்குச் செல்லும்போது பருத்தியினாலான பை அல்லது சணல் பைகளை கொண்டு சென்று கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை தவிர்க்கலாம். 

• Reduce (குறைத்தல்) 

பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். நெகிழிப் பொருளை வாங்குமுன் அதற்கு பதிலிப் பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் வாங்கலாம். 

• Reuse (மீண்டும் பயன்படுத்துதல்)

நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை தூக்கியெறியாமல் முடிந்த அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். 

• Recycle (மறுசுழற்சி செய்தல்) 

பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் நெகிழிக் கழிவுகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யலாம். 

• Recover (மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல்)

நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலையில் எரித்து வெளியாகும் வாயுக்களைக் கவனமாக சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்தும் மின்சார சக்தி பெறலாம். 

• இது பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்கு சாதகமான வழியாகக் கருதப்படுகிறது.

XII. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள் 

1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறிப்படும் நெகிழிகளைத் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. அரசின் இந்தச் செயல்பாடு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. 

• இதனால் சுற்றுச்சூழல், விலங்குகள், நமது ஆரோக்கியத்தின் மீது நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். 

• நெகிழிகுப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதும், நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுவதும் குறைகிறது. 

• இதனால் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

2. நெகிழிப் பைகள் சிதைவடைய ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆகும் என நாம் அறிவோம். ஒரு தலைமுறை மாற 30 ஆண்டுகள் ஆகும். எனில், அந்த நெகிழிப்பை மட்குவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும். 

அந்த நெகிழிப்பை மட்குவதற்கு 16 தலைமுறைகள் தேவைப்படும்.

XIII. பதில் எழுதுக. 

• நாம் பயன்படுத்தும் பொருள்கள் எது? 

நெகிழி பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், கொள்கலன்கள், உடுத்தும் ஆடைகள்

  இன்று காலை உங்கள் கைகளில் பட்ட முதல் நெகிழிப் பொருள் என்ன? 

பல் துலக்கும் பிரஷ்

• உங்கள் வகுப்பறையை பார்வையிட்டு அதில் காணப்படும் நெகிழியால் ஆன பொருள்களைப் பட்டியலிடுக. 

நாற்காலி, பேனா, பென்சில் டப்பா, ஸ்கேல் 

• உங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வதற்கும், தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் நீங்கள் பயன்படுத்தும் பொருள்களின் வகைகள் யாவை? 

மதிய உணவுக்கலன் – பாலி கார்பனேட் (PC) 

தண்ணீரை எடுத்துச்செல்லும் பாட்டில் – பாலி கார்பனேட் (PC), PET. 

• உங்களிடம் உள்ள துணிகளின் வகைகளைப் பட்டியலிடுக. 

நைலான், பாலியெஸ்டர், பருத்தி, பட்டு

XIV. கோடிட்ட இடங்களை நிரப்புக.

i)

ii) கொடுக்கப்பட்டுள்ள படத்தினை உற்றுநோக்கி என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள். 

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியினாலான பாட்டில்கள், கேன்கள் வடிகாலை அடைத்து நீரை வடியவிடாமல் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது.

தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் பெருகி மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. 

கழிவு நீர் தேங்குவதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்குகிறது. 

iii) கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, அவற்றை வரைபடத்தில் குறிக்கவும், நாடுகளையும் அவை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் அளவையும் ஒப்பிடுக.

மாணவர் செயல்பாடு

செயல்பாடு :1

சில ஐஸ்கட்டிகள் மற்றும் ஓரு பாலித்தீன் பை இரண்டையும் ஒப்பிடுக. இரண்டு பொருள்களிலுமே பல எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் இணைந்துள்ளன. இவ்விரண்டுமே பலபடி பொருள்களா?

நைலான் இழை அதிக வலுவானதாக உள்ளதால் மலை ஏறவும் பயன்படுத்தப்படுகிறது.

நைலான் என்ற பலபடி இழையானது – பாலிஅமைடுகள் என்ற வேதித்தொகுப்புகளால் ஆனது. ஹெக்ஸாமெத்திலீன்-டை – அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் பாலி அமைடுகள். திண்ம சில்லுகளாக இந்த பாலிஅமைடுகளை உருக்கி, -வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும்பொழுது நைலான் உருவாகிறது.

இழைகளை அவற்றின் வலிமை அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்திக

விடை : பருத்தி, கம்பிளி, பட்டு, நைலான்

மேலே உள்ள செயல்பாட்டிலிருந்து நீவிர் அறிவது யாது?

விடை : நைலான் நூல் வலிமையான நூல் ஆகும்.

எந்த வகை இழை அதிக வலிமையானது?

விடை : நைலான்

எந்த வகை இழை வலிமை குறைவானது?

விடை : பருத்தி

இரும்புத் தாங்கியில் கிளாம்ப் பொருத்தப்பட்டு முனையில் எடைகற்கள்

செயல்பாடு : 2

நைலான் எவ்வளவு வலிமையானது?

இரும்பாலான தாங்கி ஒன்றினை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கிளாம்பினைப் பொருத்தவும். 50செ.மீ நீளமுடைய பருத்தி இழை, நைலான் இழை மற்றும் பட்டு இழைகளை எடுத்துக் கொள்.

முதலில், பருத்தி இழையின் ஒரு முனையைத் தாங்கியில் கட்டித் தொங்கவிட்டு, அதன் கட்டப்படாமல் முனையில் எடைகற்கள் வைக்கக்கூடிய அளவிற்கு ஒரு குறுந்தட்டினை பொருத்தமாகத் தொங்கவிடுக. பின்னர் குறந்தட்டின்மேல் பத்து கிராமில் தொடங்கி, ஒவ்வோர் எடைகல்லாக வைத்துக் கொண்டே வருக, நூல் அறுந்து போகும்வரை வரை எடைகற்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, அறுந்துபோகும் போது, எந்த எடையில் கயிறு அறுந்தது என்பதனைக் குறித்துக் கொள்க. இதே செயல்பாட்டினை கம்பளி நூல், பட்டு நூல் மற்றும் நைலான் இழைகள் கொண்டு மீளச் செய்க.

குறிப்பு : அனைத்து வகை இழைகளும் ஒரே தடிமனாக இருக்க வேண்டும்.

கீழ்க்காணும் அட்டவணையில் தகவல்களை நிரப்புக

செயல்பாடு : 3

இழையினை இனங்காண்க : ஒரு செயல்பாட்டினைச் செய்வோமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கண்டு அவை எந்த வகையான இழைகளால் ஆனவை என்பதனை இனம் காண்போமா

செயல்பாடு : 4

செயற்கை இழையா? இயற்கை இழையா? 

பல இழைகளாவன துண்டுத் துனிகளை, மாணவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டுப் பார்க்கச் செய்க. ஒவ்வோரு துண்டுத் துணியும், எந்த வகை இழையால் செய்யப்பட்டது என்பதனைக் கண்டறிந்து, அது செயற்கை இழையா அல்லது இயற்கை இழையா என வகைப்படுத்த வேண்டும்.

1. சணல் – இயற்கை 

2. பருத்தி  – இயற்கை

3. ரேயான்  – செயற்கை 

4. கம்பிளி  – இயற்கை

5. பாலிஸ்டர்   செயற்கை

இதுவரை நான்கு செயல்பாடுகளைச் செய்துள்ளோம். இவற்றுள் எந்தச் செயல்பாடு, கொடுக்கப்பட்ட துணியிலுள்ள இழையின் வகையினை இனம் காண உதவியது எனக் கூற இயலுமா? 

விடை : செயல்பாடு : 3, 4

(நமக்கு நன்கு அறிமுகமான படங்களைக் காட்டியும், அப்படங்களிலுள்ள பொருள்களின் இழைகளை மாதிரியாகக் கொடுத்துத் தொட்டுப் பார்த்ததும், அந்த இழையின் வகையை இனம்காண உதவியது அல்லவா!) இதுவரையில் நாம் பாலியெஸ்டர், நைலான், அக்ரிலிக் போன்ற இழைகளால் ஆன பொருள்களைப் பற்றி படித்தோம். இந்தச் செயற்கை இழைகள் அனைத்தும் பலபடிபொருள்கள் என்றழைக்கப்படும். பலபடி பொருள்கள் பற்றி மேலும் சில பக்கங்களில் விவரமாக அறியவிருக்கிறோம்.

செயல்பாடு : 5 

இயற்கை இழையால் ஆன ஒரு துண்டுத்துணியினையும் செயற்கை இழையால் ஆன ஒரு துண்டுத்துணியினையும் எரித்தல்

குறிப்பு : இந்தச் செயல்பாட்டினை ஆசிரியரே மாணவர்களுக்குச் செய்து காட்ட வேண்டும்.

பருத்தியால் ஆன துண்டுத்துணி ஒன்றினையும், பாலியெஸ்டராலான ஆன துண்டுத்துணி ஒன்றினையும் எடுத்துக்கொள்க. இரு துண்டுத்துணிகளும் ஒரே அளவாக இருக்கலாம். (2 செ.மீ ×  2 செ.மீ போதுமானது). தீச்சுடர் மற்றும் வெப்பத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள துணிகளை இடுக்கியால் பிடித்திடுக. இரு துண்டுத் துணிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எரித்து, அவை எரியும்பொழுது என்ன நிகழ்கிறது என உற்றுநோக்குக.

பருத்தித் துணி எரியும் பொழுது நீங்கள் கண்டது என்ன?

பருத்தித் துணி முற்றிலும் எரிந்துவிடும் உருகாது மற்றும் காகிதம் எரிவது போல் வாசனை வருகிறது

பாலியெஸ்டர் துணி எரியும்பொழுது நீங்கள் கண்டது என்ன?

பாலியெஸ்டர் துணி எறியும் பொழுது கரும்புகை உண்டாகிறது

இயற்கை இழைகளின் (பருத்தி) எரிதல், செயற்கை இழைகளின் (பாலியெஸ்டர்) எரிதலில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பதைக்  கவனித்திருப்பீர்கள்.

பருத்தித் துணியினைச் சுடரில் காட்டியபொழுது அது எரிந்திருக்கும். மாறாக, செயற்கை இழைகளைக் கொண்ட பாலியெஸ்டர் துணியானது சுடரில் காட்டியபொழுது அது உருகியிருக்கும். செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணிவதிலுள்ள குறைபாடுகளுள் இதுவும் ஒன்று. செயற்கை இழையாலான ஆடை அணிந்திருக்கும் பொழுது, துணி தீப்பற்றினால் அந்த ஆடை உருகி உடம்புடன் ஒட்டிக்கொண்டு கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, சமைக்கும்பொழுதும் ஆய்வகங்களில் பணியாற்றும்பொழுதும், செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது

பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி வடிக்கும்பொழுது கிடைக்கும் துணை விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்களே செயற்கை இழைகளாகும். பெட்ரோலிய எண்ணெய்யைக் காய்ச்சி வடித்தல் பற்றி உயர் வகுப்புகளில் கற்றுக் கொள்வீர்கள்.

செயல்பாடு : 6 

ஒரு பருத்தித்துணி மற்றும் குடைத்துணியை நனைத்தல்

மழை நாள்களில் நாம் குடை பயன்படுத்துகிறோம் அல்லவா? நாம் என்ன வகையான குடை  பயன்படுத்துகிறோம்? பாலியெஸ்டர், நைலான்

பருத்தித் துணியால் ஆன குடையினைப் பயன்படுத்த முடியுமா? முடியாது

மழைநீரில் இருந்து நம்மைத் பாதுகாத்துக் கொள்ள, நாம் ஏன் பருத்தித்துணியால் ஆன குடையினைப் பயன்படுத்துவதில்லை என்ற கருத்தினில் தெளிவு பெற, தற்பொழுது ஒரு செயல்பாட்டினைச் செய்வோமா?

தோரயமாக 10 செ.மீ × 10 செ.மீ என்ற அளவில் பருத்தித்துணி ஒன்றினையும், அதே அளவிலான நைலான் அல்லது பாலியெஸ்டர் இழைகளாலான பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள ஓட்டைகள் ஏதுமற்ற பழைய குடைத்துணி ஒன்றினையும் எடுத்துக்கொள்க. நான்கு மாணவர்களை அழைத்து, அவர்களிடம் பருத்தித் துணியினைக் கொடுத்து, துணியின் நான்கு மூலைகளையும், ஒவ்வொருவர் ஒரு மூலை வீதம் பிடிக்கச் சொல்லி, துணியின் நடுவில் ஒரு டம்ளர் அளவுள்ள நீரை ஊற்றச் சொல்லவும். பின்னர், பழைய குடைத்துணியினையும் அதேபோல் மூலைக்கு ஒருவர் வீதம் நான்கு மூலைகளிலும் பிடித்துக் கொண்டு, துணியின் நடுவில் ஒரு டம்ளர் அளவுள்ள நீரை ஊற்றச் சொய்க. பருத்தி மற்றும் குடைத்துணி – இவ்விரண்டிலும் நீர் ஊற்றியபொழுது ஏற்பட்ட நிகழ்வுகளை உற்றுநோக்கி உமது குறிப்பேட்டில் நிகழ்வுகளைப் பதிவிடுக.

பருத்தித் துணி அல்லது குடைத்துணி (நைலான் அல்லது பாலியெஸ்டர்) தற்பொழுது, மாணவர்களை இரு துண்டுத் துணிகளையும் சூரிய ஒளியில் உலர்த்தச் சொல்லவும். எந்தத் துணி விரைவில் உலருகிறது? பருத்தித்துணி அல்லது குடைத்துணி? குடைத்துணி

எடுத்துக்கொண்ட இரு துணிகளுள் எது நீரினைத் தன் வழியே செல்ல அனுமதிக்கிறது? பருத்தித் துணி அல்லது குடைத்துணி

குடைத்துணி தன் வழியே நீரை செல்ல அனுமதிக்கிறது

(நைலான் அல்லது பாலியெஸ்டர்) தற்பொழுது, மாணவர்களை இரு துண்டுத் துணிகளையும் சூரிய ஒளியில் உலர்த்தச் சொல்லவும். எந்தத் துணி விரைவில் உலருகிறது?  பருத்தித்துணி அல்லது குடைத்துணி?

குடைத்துணி

செயல்பாடு :7

நெகிழியின் சரியான மற்றும் தவறான பயன்பாடு 

கொடுக்கப்பட்டுள்ள எட்டு நெகிழிப் பொருள்களின் படத்தினைக் காணவும். இப்பொருள்களுள், எந்த நான்கு பொருள்கள் சரியான பயன்பாட்டிற்கு உதவுவன மற்றும் எந்த நான்கு பொருள்கள் தவறான பயன்பாட்டிற்கு உதவுவன என முடிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பதிவிடவும்

சரியான பயன்பாடு : தவறான பயன்பாடு

தலைகவசம் : உறிஞ்சுக்குழாய்கள்

ஊசிகள் : மெல்லிய நெகிழிகள்

மின்கம்பிகள் : தேநீர்க் குவளைகள்

இரத்தப்பைகள் : சமையலறைக் கருவிகள்

செயல்பாடு : 8

வெவ்வேறு வகையான நெகிழிகளை இனம் காண்க

வெவ்வேறு வகையான நெகிழிப் பொருள்களைச் சேகரித்து அவற்றில் காணப்படும் ரெசின் குறியீடு அல்லது அப்பொருளின்மீது காணப்படும் சுருக்கெழுத்தினை கவனமாகப் பார்க்க. கொடுக்கப்பட்டுள்ள ரெசின் குறியீடு விளக்கப்படத்தின் உதவியோடு, உங்களிடம் உள்ள நெகிழிப் பொருள் நாம் பயன்படுத்த, பாதுகாப்பானதா, பாதுகாப்பற்றதா, சந்தேகத்திற்கு இடமானதா, என இனம் காண்க. அப்பொருள்களின் மேல் என்ன ரெசின் குறியீடுகளை நீங்கள் காண்கிறீர்கள்? அந்த ரெசின் குறியீடு பாதுகாப்பான பொருளைக் குறிப்பிடுகிறதா? அல்லது பாதுகாப்பற்ற தன்மையை உணர்த்துகிறதா? அல்லது சந்தேகத்திற்கு இடமாக உள்ளதா அல்லது ரெசின் குறியீடே இல்லையெனும் பொழுது அப்பொருள் பாதுகாப்பற்றது என கண்டறிந்து அட்டவணையில் பதிவிடுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *