Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 2

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 2

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

கவிதைப்பேழை: அக்கறை

I. இலக்கணக் குறிப்பு

  • உருண்டது – ஒன்றன் பால் வினைமுற்று
  • போனது – ஒன்றன் பால் வினைமுற்று
  • சரிந்தது – வினையெச்சம்
  • அனவரும் – முற்றுமை

II. பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து – சரி + த்(ந்) + த் + உ

  • சரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால் இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

III. பலவுள் தெரிக

வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?

  1. ஒரு சிறு இசை
  2. முன்பின்
  3. அந்நியமற்ற நதி
  4. உயரப் பறத்தல்

விடை :ஒரு சிறு இசை

I. சிறு வினா

1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது – இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக.

கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்: மிதி வண்டியில் இருந்து விழந்த தக்காளிகள் சாலையில் விழந்து நசுங்கின. அங்குப் போவோர் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது எது மற்ற மனிதர்கள் மீது அக்கைற இல்லாததால் தான் என்கிறார் கல்யாண்ஜி

2. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.

மண்ணில் பிறந்தோம்மண்ணில் தவழ்ந்தோம்மண்ணில் நடந்தோம்அதானல் தானோ என்னவோவிளையாட்டையும் கூட மண்ணில் தொடங்கினோம்மதங்களை மறந்துமனிதநேயத்தோடுஇறை இல்லங்களை கட்டினோம்சாதிப்புயல் அதை சூறையாடிவிட்டது

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கல்யாண்ஜியன் இயற்பெயர் ____________

விடை : கல்யாணசுந்தரம்.

2. ____________ என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

விடை : ஒரு சிறு இசை

3. கல்யாண்ஜி ____________ -ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

விடை : 2016

II. குறு வினா

1. புதுக்கவிதைகள் என்பது யாது?

உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார். அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள்.

2. புதுக்கவிதைகள் எதனை வலியுறுத்துவனவாக இருக்கின்றன?

புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன

3. எதன் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் மனிதம் நசுங்கிவிடக் கூடாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்?

மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

4. கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் எவை?

  • புலரி
  • முன்பின்
  • ஆதி
  • அந்நியமற்ற நதி
  • மணல் உள்ள ஆறு

5. கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு எது?

கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும்.

6. கல்யாண்ஜி எழுதிய சிறு கதை தொகுப்பு எது?

  • கலைக்க முடியாத ஒப்பனை
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • உயரப் பறத்தல்
  • ஒளியிலே தெரிவது

7. எந்த சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?

ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.

8. கல்யாண்ஜிக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?

கல்யாண்ஜிக்கு 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.

அக்கறை – பாடல் வரிகள்

சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *