Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 1

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 1

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

உரைநடை: ஏறுதழுவுதல்

I. பலவுள் தெரிக.

1. பொருந்தாத இணை எது?

  1. ஏறுகோள் – எருதுகட்டி
  2. திருவாரூர் – கரிக்கையூர்
  3. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  4. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

விடை : திருவாரூர் – கரிக்கையூர்

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

  1. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
  2. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
  3. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
  4. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதைஆ) தமிழ் அகராதிஇ) தழுவிப் பிடித்தல் என்கிறது
  1. ஆ – அ – இ
  2. ஆ – இ – அ
  3. இ – ஆ – அ
  4. இ – அ – ஆ

விடை : ஆ – அ – இ

II. குறு வினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

  • ஜல்லிக்கட்டு
  • மாடு பிடித்தல்
  • மஞ்சு விரட்டு

2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

  • ஏறுகோள்
  • எருதுகட்டி

3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

  • சேலம்
  • நீலகிரி – கரிக்கையூர்
  • மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
  • தேனி – சித்திரக்கல் புடவு
  • சிந்துசமவெளி அகழாய்வு

III. சிறு வினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.ஏறுதழுவுதல் இங்கனம் திணைநிலை வாழ்வுடன் பிணைந்துள்ளதை அறியலாம்.

IV. நெடு வினா

1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க

காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக்  ஸ்பெயின் நாடு கொண்டுள்ளது. காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அதில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாடுகளில் கொல்லவதும் உண்டு.வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது.நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.எவராலும் அடக்க முடியாத காளைகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.மாட்டுப் பொங்கள் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும் வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது ____________

விடை :  தமிழர் வரலாறு.

2. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை ____________

விடை : மாடுகள்

3. ஏறுதழுவுதல், ____________ உணர்த்தும் விளையாட்டு

விடை : தமிழரின் நாகரிகத்தை

4. ____________ நூற்றாண்டுகள் பல கடந்தும் தமிழர்தம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருக்கிறது.

விடை : ஏறுதழுவுதல்

5. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான ஏறு தழுவுதல் ____________ ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது.

விடை : 2000

6. ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் சிற்றிலக்கியம் ____________

விடை : கண்ணுடையம்மன் பள்ளு

7. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு ____________

விடை : காளைச்சண்டை

II. சிறு வினா

1. எவை எருதுகள் என்று அழைக்கப்பட்டன?

ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் எருதுகள் என்று அழைக்கப்பட்டன

2. எந்த வரிகளில் முல்லைக்கலி ஏறு தழுவுதல் களம் குறித்த காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகிறது?

எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்

(கலி – 102: அடி 21-24)

3. காளைகள் மருதநிலத்துப் போர் வீரர்களை நிகர்த்தனவாக இருந்தன என்பதனை உரைக்கும் அடிகளை எழுதுக

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன

(கலி – 106: அடி 7-10)

4. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் வேறு சில பெயர்கள் யாவை?

  • ஏர் மாடுகள்
  • எருதுகள்
  • ஏறுகள்

5. ஏறுகோள் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் யாவை?

  • சிலப்பதிகாரம் – இலக்கியம்
  • புறப்பொருள் வெண்பாமாலை – இலக்கணநூல்

6. ஏறுதழுவுதல் பற்றி எடுத்துரைக்கும் நூல் எது?

  • பள்ளு – சிற்றிலக்கியம்

7. எருதுகட்டி என்னும் மாடுதழுவுதல் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் யாவை?

  • கண்ணுடையம்மன் பள்ளு

8. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் நாடு எது?

ஸ்பெயின் நாடு

9. மாட்டுப் பொங்கல் எதற்காக கொண்டாடப்படுகிறது?

தமிழக உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல்.

10. காளைப்போர் இடம் பெற்றுள்ள் வெளிநாட்டுச் சித்திரங்கள் யாவை?

  • எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்கள்
  • கிரிட் தீவில் உள்ள கினோஸஸ் என்னுமிடத்திலுள்ள அரண்மனைச் சிற்பங்கள்

11. ஏறு தழுவுதல் வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது எவ்வாறு?

முல்லை நிலம் மக்களின் அடையாளத்தோடும்

மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும்

பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.

இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

III. குறு வினா

1. ஏறு தழுவுதல் வேறு பெயர்கள் யாவை?

  • மாடு பிடித்தல்
  • மாடு அணைதல்
  • மாடு விடுதல்
  • மஞ்சு விரட்டு
  • வேலி மஞ்சு விரட்டு
  • எருது கட்டி
  • காளை விரட்டு
  • ஏறு விடுதல்
  • சல்லிக்கட்டு

2. ஜல்லிக்கட்டு – பெயர்க்காரணம் எழுதுக

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்ததாலும் ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

3. மாட்டுப்பொங்கல் கொண்டாடும் விதத்தினை விளக்குக

மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர்.கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர்.பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

4. சிந்துவெளி நாகரிக வரலாற்றில் காளை பங்கு பற்றி விவரிக்க

சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப் பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *