Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 1

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 1

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

கவிதைப்பேழை: ஒன்றே குலம்

I. சொல்லும் பொருளும்

  1. நமன் – எமன்
  2. நாணாமே – கூசாமல்
  3. சித்தம் – உள்ளம்
  4. உய்ம்மின் – ஈடேறுங்கள்
  5. நம்பர் – அடியார்
  6. ஈயில் – வழங்கினால்
  7. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

  1. புலன்
  2. அறனை
  3. நமனை
  4. பலனை

விடை : நமனை

2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.

  1. குலம்
  2. குளம்
  3. குணம்
  4. குடம்

விடை : குலம்

3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. நம் + இல்லை
  2. நமது + இல்லை
  3. நமன் + நில்லை
  4. நமன் + இல்லை

விடை : நமன் + இல்லை

4. ‘நம்பர்க்கு + அங்கு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. நம்பரங்கு
  2. நம்மார்க்கு
  3. நம்பர்க்கங்கு
  4. நம்பங்கு

விடை : நம்பர்க்கங்கு

III. குறு வினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

மனிதர் அனைவரும் ஒரே இனம்.உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்பதை மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர்மனிதர் அனைவரும் ஒரே இனம்.இறைவன் ஒருவனே என்பதை ஏற்றல்அடியவர்களாகிய மக்களுக்குக் காணிக்கை கொடுத்தல்ஆகியவற்றை செய்ய வேண்டும்

IV. சிறு வினா

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

படங்கள் அமைந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அப்பொருள் நடமாடும் கோயில் ஆகிய உடம்பை உடைய அடியார்களுக்கு சேராதுஆகையால் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கு கொடுப்பதை போன்றதாகும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நாயன்மார்கள் ________________

விடை : அறுபத்து மூன்று

2. மக்கள் அனைவரும் ஒரே ________________

விடை : இனத்தினர்

3. நமன் என்ற சொல்லிற்கு ________________ என்று பொருள்

விடை : எமன்

4. ஒன்றே குலம் ஒருவனே ________________

விடை : தேவன்

5. உலகமக்கள் அனைவரையும் ________________ கருதி அன்புகாட்ட வேண்டும்.

விடை : உடன் பிறந்தவராகக்

II. “ஒன்றே குலம்” பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனைச் சொற்கள்:-

  • ஒன்றே – ஒருவேன
  • நன்றே – நமனில்லை
  • நின்றே – நிலைபெற
  • படமாடக் – பகவற்கு
  • நடமாடக் – நம்பர்க்கு

எதுகைச் சொற்கள்:

  • ஒன்றே – நன்றே
  • சென்றே – நின்றே
  • படமாடக் – நடமாடக்
  • கோயில் – ஈயில்

III. சிறு வினா

1. எதனை பாராட்டுவது தவறானது?

மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது.

2. எவ்வாறு அன்பு காட்ட வேண்டும்?

உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும்.

3. எது இறைத் தொண்டாகும்?

பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத் தொண்டாகும்.

4. திருமந்திரம் நூலின் வேறுபெயர் என்ன

தமிழ் மூவாயிரம்

5. நடமாடும் கோயில் என்று திருமூலர் யாரைக் கூறுகிறார்?

நடமாடும் கோயில் என்று திருமூலர் அடியார்களாகிய மக்களை கூறுகிறார்

IV. குறு வினா

1. திருமூலர் பற்றிய குறிப்பு வரைக

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
  • பதினெண் சித்தர்களில் ஒருவர்
  • திருமந்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்

2. திருமந்திரம் குறிப்பு வரைக

  • திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர்
  • 3000 பாடல்களைக் கொண்ட நூல் இது
  • பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *